t

கணவனை துடிக்க துடிக்க கொலை செய்த மனைவி? -கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற கொடூரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்…………..

advertisement by google

கணவனை துடிக்க துடிக்க கொலை செய்த மனைவி -……..

advertisement by google

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற கொடூரம்………

advertisement by google

முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்

advertisement by google

சென்னை காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். கார் ஓட்டுநர்.

advertisement by google

இவரின் மனைவி பவானி. இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

advertisement by google

கடந்த 22 ஆம் தேதி தரணிதரன், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்

advertisement by google

அவரின் மனைவி. துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தரணிதரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பவானியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தனர்.

advertisement by google

கழுத்து இறுக்கப்பட்டு மரணம் நேர்ந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வரவும், பவானியின் செல்போனுக்கு அடிக்கடி ஒருவரிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பும் சந்தேகத்தை உறுதிபடுத்தியது.

பவானியை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்த போது தான் நடந்த கொடூரங்கள் வெளியானது.

தரணிதரனின் நண்பனான தினேஷ், அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இருவரும் ஓட்டுநர்கள் என்பதால் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும் வாடிக்கையானதே. மனைவியை பிரிந்து வாழ்ந்த தினேஷூக்கு, நண்பனின் மனைவியான பவானி மீது காதல். இருவரும் நெருங்கிப் பழக இடையூறாக இருந்துள்ளார் தரணிதரன்.

காதல் கண்ணை மறைக்கவே, கணவனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார் பவானி.

கடந்த 21 ஆம் தேதி பூச்சி மருந்து வாங்கி வந்து அதை உணவில் கலந்து தரணிதரனுக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டு சென்றுள்ளார் தினேஷ்

காதலனின் வார்த்தையை ஏற்று பவானியும் அதை செய்யவே, பூச்சி மருந்து பலன் அளிக்காமல், அடுத்த நாள் அதிகாலை எழுந்து காபியையும் குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் இருந்துள்ளார் தரணிதரன்.

இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, தன் காதலன் தினேஷை வரவழைத்தார்.

இருவரும் சேர்ந்து தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளனர். பின்னர் கணவரே தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்துவிட்டு வழக்கம் போல தங்கள் நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். நடந்த இந்த தகவல்களை எல்லாம் போலீசாரிடம் பவானி சொல்லவே, அவர்களே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பவானி, அவரின் காதலன் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது தன் கணவனை எப்படி கொன்றேன்? என பவானி நடித்துக் காட்டியதும் அதிர்ச்சியின் உச்சம். குன்றத்தூர் சம்பவத்தில் அபிராமியின் வலையில் இருந்து கணவர் தப்பி, குழந்தைகள் உயிர் அநியாயமாய் போனது.. ஆனால் பவானி வழக்கில் பிள்ளைகள் தப்பிக்க, கணவனின் உயிர் கொடூரமாக போயிருக்கிறது… உயிரிழந்த தந்தை, சிறையில் தாய் என இருக்க பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை தான் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது….

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button