t

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் 8 வயது சிறுமி கொலை வழக்கு – குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சாத்தான்குளம் 8 வயது சிறுமி கொலை வழக்கு – குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடலிவிளை காட்டுப்பகுதியில் கடந்த 15.07.2020 அன்று கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி முத்தார் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் கள்விளை இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரர்(வயது 18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்தீஸ்வரர் நண்பரான நந்தீஸ்வரன்(வயது 18) ஆகியோர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. , இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

advertisement by google

✍முக்கிய குற்றவாளியான முத்தீஸ்வரர் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு நாகராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரி முத்தீஸ்வரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு நாகராஜன் எதிரி முத்தீஸ்வரணை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைத்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button