கோவில்பட்டியில் கால்நடை மருந்து கடையில் ஊழியரின் கவனத்தினை திசை திருப்பி பணம் திருட்டு ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் கால்நடை மருந்து கடையில் ஊழியரின் கவனத்தினை திசை திருப்பி பணம் திருட்டு
கோவில்பட்டி கிருஷ்ணண் கோவில் பின்புறம் ஜான்பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான கால்நடை மருந்து கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று லைட்புளு சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார். சில மருந்துகளை பெயரை சொல்லி வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த பெண் ஊழியர் மருந்துக்களை எடுத்து கொண்டு இருந்துள்ளார். அந்த பெண் ஊழியரிடம் தொடர்ச்சியாக மருந்துகள் பெயரை சொல்லியதால் பெண்மணி திரும்பிய படி மருந்துக்களை எடுத்து கொண்டு இருந்துள்ளார். தீடீரென அந்த டீப் டாப் ஆசாமி தான் சொன்ன மருந்துகளை எடுத்து பார்சல் பண்ணி வைக்கவும் ஆட்டோ கூப்பிட்டு வந்து எடுத்துச்செல்வதாக பெண் ஊழியரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் டிப்டாப் ஆசாமி திரும்பி வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெண் ஊழியர் தனது உரிமையாளர் ஜான்பிரிட்டோவிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையெடுத்து விரைந்து வந்த ஜான் பிரிட்டோ கடைக்கு வந்து நடந்த விபரங்களை ஊழியரிடம் கேட்ட தெரிந்த பின்னர் சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை பார்த்த போது அந்த டிப்டாப் ஆசாமி கல்லாவில் இருந்த ரூ 25 ஆயிரம் பணத்தினை திருடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் பிரிட்டோ கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.