கர்நாடகாவில் ஒரே சமயத்தில் அக்காவின் மகள்கள்,இருவரை மணந்த இளைஞர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கர்நாடகா: ஒரே சமயத்தில் அக்கா மகள்கள் இருவரை மணந்த இளைஞர் கைது
கர்நாடகாவில் ஒரே சமயத்தில் இரு சகோதரிகளை மணந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேகமகடு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (30). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகள்களான சுப்ரியா (19), லலிதா (16) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து, கோலார் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சுப்ரியாவுக்கு பேசும் திறன் குறைபாடு உள்ளதால் அவரை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவரது தயார் தனது சகோதரான உமாபதியிடம் பேசி இரு மகள்களையும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இளைய மகளுக்கு 18 வயது நிறைவடையாததால்,குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி, மணமக்களின் பெற்றோர் மீது முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உமாபதியை நேற்று கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.