இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த பேக் ஐடி இளைஞர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!*
இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் முகநூலில் இளைஞர்களுக்கு, பெண்கள் பெயரில் சாட்டிங் செய்து, அவர்களின் வாட்ஸ் அப் எண்ணை பெற்று அதற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புவார். அந்த குறுஞ்செய்தியை அவர்கள் கிளிக் செய்ததும் அவர்களது செல்போன்னில் உள்ள புகைப்படம், வீடியோ, தொலைபேசி எண்கள், இமெயில் ஐடி என முழுவதையும் அக் செய்துவிடுவார்.
இப்படி பல இளைஞர்களின் தொலைப்பேசி எண்களை பெற்ற பிறகு, இணையதளத்தில் உள்ள பெண்களின் ஆபாச வீடியோக்களை வீடியோகால் மூலம் காண்பித்து தான் ஒரு பெண் என அவர்களை நம்பவைப்பார். அதேபோல், அந்த இளைஞர்களையும் நிர்வாணமாக வீடியோ காலில் வரவழைத்து அதைப் பதிவு செய்து வைத்துள்ளார். பிறகு அவர் பதிவு செய்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், இவரால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் நரேந்திரனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பறித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக, இவர் 15-கும் மேற்ப்பட்ட போலியான இ-மெயில் ஐடிகளையும், 5-கும் மேற்ப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகளையும் பயன்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நரேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.