பயனுள்ள தகவல்மருத்துவம்

முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க, அப்பதான் இயல்பாவே அழகா இருப்பீங்க?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க, அப்பதான் இயல்பாவே அழகா இருப்பீங்க

advertisement by google

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவுகிறீர்கள். அதிலும் எப்படி கழுவுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் சருமத்தின் ஆரோக்கியம் அடங்கியிருக்கும்.

advertisement by google

சரும சுத்தம் என்பது அன்றாடம் அனைவரும் செய்யகூடியதுதான். ஆனால் இதையும் முறையாக செய்ய வேண்டும். இரவு தூங்கி எழும் போதும், மதிய வேளையில் தூங்கி மாலையில் எழும் போதும் முகத்தில் வியர்வையும், எண்ணெய்பசையும் இயல்பாகவே உண்டாககூடும். கூடுதலாக பகல் நேரங்களில் தூசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் சருமத்தில் தங்கியிருக்கவும் வாய்ப்புண்டு.

advertisement by google

ஆனாலும் சுத்தமான முறையில் சருமத்தை பராமரித்தால் அழகான சருமம் சாத்தியமே அதற்கு எந்த பொருள்களும் உபயோகிக்க தேவையில்லை. சுத்தமான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவினாலே போதும். ஆனால் அப்போது செய்ய கூடாத விஷயங்கள் என்ன என்பது குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

advertisement by google

​கைகளை சுத்தம் செய்யுங்கள்

advertisement by google

பலரும் செய்யும் தவறு இதுதான். நீங்களும் கூட இந்த தவறை செய்யலாம். வெளியிலிருந்து வந்ததும் அல்லது முகம் கழுவும் போதும் உள்ளங்கைகள் முழுக்க நீர் நிரப்பி அப்படியே முகத்தில் அடித்து முகத்தை கழுவுவார்கள்.

advertisement by google

இதனால் உள்ளங்கைகளில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் பற்றிவிட அதிக வாய்ப்புண்டு. இதனால் முகத்தில் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

advertisement by google

முகம் கழுவுவதற்கு முன்பு கைகளை சோப்பு கொண்டு சுத்தமாக கழுவி பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை எப்போதும் மறக்க வேண்டாம்.

​வெந்நீரா குளிர்ந்த நீரா

பொதுவாக குளியலுக்கே குளிர்ந்த நீர் பயன்படுத்துவதுதான் சிறந்தது. நம்மில் பலரும் வெந்நீரை அதிகம் பயன்படுத்திவருகிறோம். வெந்நீர் சருமத்தின் மீது படும்போது அவை சருமத்துக்கு சேதத்தை உண்டாக்கும்.

வெந்நீரில் முகத்தை கழுவிதான் பழக்கம் என்றால் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவதன் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம். குளிர்காலமாகவே இருந்தாலும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோடையில் சாதாரணமாக மந்தமான நீரை பயன்படுத்தினாலே போதுமானது.

​மேக் அப் கொண்டு கழுவ வேண்டாம்

பலரும் செய்யும் மற்றொரு தவறு மேக்- அப் பயன்படுத்திய பிறகு அதை கலைக்காமல் முகத்தை அப்படியே கழுவி விடுவதுதான். இதனால் மேக் அப் பொருள்களில் இருக்கும் இரசாயனங்கள் வெளியேற முடியாமல் சருமத்துளைகளில் தங்கி முகப்பொலிவை குறைக்கும்.

தொடர்ந்து இதை செய்யும் போது அழுக்குகள் முகத்திலேயே தங்கி சருமப் பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேக் அப் குறைந்த அளவே பயன்படுத்தினாலும் கூட அதை சருமத்தில் தங்காமல் முழுவதுமாக வெளியேற்றிய பிறகு முகத்தை கழுவுவதே நல்லது.

ஸ்க்ரப் செய்யவேண்டாம்

பெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த பழக்கம் உண்டு. குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் வெறும் நகங்களை கொண்டு சருமத்துக்கு ஸ்க்ரப் செய்வார்கள். நாம் முகத்தில் இறந்த செல்களை வெளியேற்ற ஸ்க்ரப் செய்வது உண்டு என்றாலும் கடுமையாக செய்யும் போது சருமத்துளைகள் திறக்கப்பட்டு பருக்கள் வருவது எளிதாகிவிடும்.

எப்போதும் நகங்களை கொண்டு தேய்ப்பதோ அழுந்த துடைப்பதோ சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்கும். மென்மையாக கைகளால் அழுத்தம் கொடுத்து ஸ்க்ரப் செய்தாலே போதும் சுத்தமான நீரிலேயே முகம் பளிச் என்று ஆகிவிடும்.

​முகத்தை துடைக்கும் முறை

முகத்தை மென்மையாக கழுவுவது போன்று முகத்தை துடைப்பதும் முக்கியமானது. கனமான துண்டை பயன்படுத்தி அழுத்தி துடைப்பதும் நல்லதல்ல. முகத்தை துடைக்காமல் மெல்லிய பருத்தி துணி கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும்.

ஏனெனில் உடலில் இருக்கும் சருமத்தில் முகத்தில் இருக்கும் சருமம் மேலும் மென்மையாக இருக்க வேண்டும். அதனால் மாய்சுரைசர் தேர்வு செய்யும் போதும் சரும மென்மைக்கு ஏற்றபடி தேர்வு செய்ய வேண்டும்.

தினமும் 4 அல்லது 5 முறை முகத்தை கழுவினாலே போதுமானது. முகம் சுத்தம் செய்ய பெரும்பாலும் கடினமான பொருள்களை பயன்படுத்தாமல் மென்மையான பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சருமத்தின் வறட்சி பாதிக்காமல் இருக்கும் அளவுக்கு. இவை எல்லாமே இயல்பான விஷயங்கள். ஆனால் இதில் கவனம் செலுத்தினாலே இயல்பான அழகும் சாத்தியம் தான். பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button