கோவில்பட்டி யில் சிஎஸ்ஐ ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் உருளைக்குடி, பீக்கலிபட்டி வாதம்பட்டி திப்பனூத்து லிங்கம்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள ஏழைஎளிய மக்கள் & மாற்றுத்தினாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி. சிஎஸ்ஐ ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் உருளைகுடியில் நலத்திட்ட உதவிகள்கோவில்பட்டி அருகே,உருளைகுடி ஊராட்சியில் உருளைகுடி, பீக்கலிபட்டி, வரதம் பட்டி, திப்பனூத்து, லிங்கம் பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள *100க்கும் மேற்பட்டமாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு உருளைகுடியில் நூற்றாண்டு விழா கண்ட சிஎஸ்ஐ தூயபவுலின் ஆலய வளாகத்தில்வைத்து,கொரானாநிவாரணப் பொருட்களாக அரிசி, பருப்பு,முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல, T.G.ராக்லண்ட் சபை மன்றத் தலைவரும் கோவில்பட்டி சேகர தலைவருமான *அருள்திரு.ஏசுவடியான் துரைசாமி* ஐயா அவர்கள் தலைமையில் சேகர செயலர் ஜேக்கப் ராஜாமணி, பொருளாளர் ராஜதுரை கிறிஸ்துதாஸ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்,உறுப்பினர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ்,ஆலய மூத்த உறுப்பினர்கள் பொன் பாண்டியன், கடலையூர் ஆபிரகாம், மேத்யூ பெத்தேல், தர்மராஜ் ஆசிரியர், டேனியல் வின்சென்ட் ஆசிரியர், சாலமோன் தங்கையா ஆசிரியர், திருமதி.கலாவதி, கிரேஸ் புஷ்பம்,சபை ஊழியர் சாமுவேல், யாபேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி சேகர ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் பொருளாளர் ஜான் ஜெபராஜ் ஆசிரியர், செயலர் லிவிங்ஸ்டன் தங்கையா ஐசிஇ டியூசன் சென்டர், ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் ஞானராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.