மதுரை மாவட்ட போலீசார் அசத்தல்?திருடுபோன மற்றும் காணாமல்போன பலலட்ச மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து பொதுமக்களிடம் பெருமை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
திருடுபோன மற்றும் காணாமல் போன பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்.
****
11.06.2020
*மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த *03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த* மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 3,32,298/- மதிப்புள்ள 30 மொபைல் போன்களும்,
SP அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.24,33,318/- மதிப்புள்ள 218 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் மோசடி செய்த சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.6,48,908/- உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவது போல் மோசடி செய்யும் நபர்களிடம், விழிப்புணர்வோடு இருக்கவும் மதுரை மாவட்ட SP திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தினார்.