இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

நகைக்கு ஆசைப்பட்டு கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது?அவருடன் பாம்பு விற்பனை செய்தவரும் கைது? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ராத்திரி 12 மணி வரை மனைவியிடம் ஜாலியாக சிரித்தபடியே பேசி கொண்டிருந்த கணவன்….

advertisement by google

அவர் தூங்கியதும் பாம்பை ஏவி கடிக்க விட்டு கொன்றுள்ளார்..

advertisement by google

மனைவியை கொலை செய்வதற்காகவே 10 ஆயிரத்துக்கு பாம்பை விலை கொடுத்து, ஒரு பையில் போட்டு வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர்!!

advertisement by google

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா..

advertisement by google

இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது..

advertisement by google

ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.

advertisement by google

இந்த நிலையில், கடந்த மாதம் மாதம் ஒருநாள் இரவு உத்ரா தூங்கி கொண்டிருந்தார்..

advertisement by google

அப்போது அவரது காலில் திடீரென ஏதோ கடித்துவிடவும் அலறி எழுந்து சத்தம் போட்டார்..

இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றார்..

அப்போதுதான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

இதையடுத்து, திருவல்லாவில் ஒரு ஆஸ்பத்திரியில் 16 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பிறகு வீட்டிற்கு திரும்பினார் உத்ரா.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்ப அவரது அம்மா ரூமுக்குள் வந்தார்.. அப்போது அசைவற்று படுக்கையில் கிடந்தார்..

வாயில் நுரை தள்ளியிருந்தது.. உடம்பெல்லாம் நீலகலரில் இருந்தது.. இந்த முறையும் உத்ராவை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே இது அதிர்ச்சியை தந்தது.

அது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழுந்தது..

உத்ரா ரூம் 2-வது மாடியில் இருக்கிறது.. அது ஏசி ரூம்.. ஏசி இருப்பதால் ஜன்னல்கள் கூட திறக்க வாய்ப்பு இல்லை. உத்ராவை பாம்பு கடித்த 2 முறையும், சூரஜ்தான் அந்த ரூமில் படுத்திருந்திருக்கிறார்..

2 பேரும் ஒரே ரூமில் படுத்திருந்தபோது, பாம்பு கடித்த அன்று விடிகாலை 5.30 மணிக்கே சூரஜ் எழுந்து வெளியே போய்விட்டார்..

அலறகூட முடியலை.. காளியை மாறி மாறி சுவற்றில் அடித்தே கொன்ற யானை தெய்வானை.. திருப்பரங்குன்றம் ஆக்ரோஷம்

அவள் உயிர் அந்த ரூமிலேயே போயிடுச்சு.. அதுக்கப்பறம் டிரெஸ்ஸிங் ரூமில் அந்த பாம்பு இருந்தது. அது மூர்க்கன் வகை என்று சொல்கிறார்கள்.. கடித்த 2 பாம்புகளும் விஷம் இருக்கிற பாம்புதான்.. எப்படி ஒரே ரூமில் 2 முறை பாம்பு கடிக்கும், இதுதான் எங்கள் சந்தேகம்…

முதல்முறை பாம்பு கடிக்கும்போதே, சூரஜ்தான் அந்தபாம்பை கையிலேயே பிடிச்சு ஒரு கோணிப்பையில் போட்டுட்டு வெளியே எடுத்துட்டு போனார்.

விஷ பாம்பை எப்படி அவர் அசால்ட்டா கையில் தூக்கிட்டு போக முடியும்னு அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. உத்ரா கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போட்டோம், கார் தந்தோம், பணம் தந்தோம்.. இன்னும் நகை, பணம் வேணும் என்று சூரஜ் கேட்டு கொண்டிருப்பதாக உத்ரா அழுது எங்ககிட்ட சொல்லியிருக்கிறாள்.. அதனால் அவள் சாவில் உரிய விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என கண்ணீருடன் சொல்லியிருந்தனர்.

இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது.. அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

உத்ராவின் நகை மீதுதான் சூரஜ்-க்கு மொத்த கவனமும் இருந்துள்ளது. ஆவருக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்திருக்கிறார்.. இந்த விஷயம் உத்ராவுக்கு தெரிந்து சண்டை போட்டுள்ளார்.. இதுதான் இவர்களுக்குள் பிரச்சனையாக இருந்திருக்கிது. ஏற்கனவே ஒருமுறை மனைவியை கொல்ல முயன்றதும் இதற்காகத்தான். அந்த முயற்சி தோல்வி அடையவும், 2வது முறையாக ஒரு விஷ பாம்பை 10 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்துள்ளார்.சம்பவத்தன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு வீட்டில் போய் ஒரு மூலையில் வைத்துவிட்டார்.. அன்று இரவு 12 மணி வரை உத்ராவிடம் ஜாலியாக பேசி கொண்டிருந்திருக்கிறார்.. 12 மணிக்கு மேல் உத்ரா தூங்கிவிடவும், அதற்கு பிறகு பையில் உள்ள பாம்பை எடுத்து உத்ரா மீது ஏவி விட்டுள்ளார். பிறகு கதவை சாத்தி கொண்டு வெளியே சென்றுவிட்டார்.. இதற்கு பிறகுதான் பாம்பு உத்ராவை கடித்துள்ளது. இவ்வளவும் விசாரணைக்கு பிறகு தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button