?நண்பகல்விரிவான செய்திகள் இந்தியா,தமிழ்நாடு,உலகம்?
????விண்மீண்தீநியூஸ் ????:
இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயார்.
?இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என நாசா அறிவிப்பு.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
?2400 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவிற்கு அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் – டிஆர்பி தகவல்..
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ???பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது
சென்னை: தந்தை# நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களும் வெளியாகி உள்ளன. சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு தொழிலதிபர். இவரது சர்ச் நண்பர் வின்சென்ட். சாமுவேலுக்கு 35 வயதில் ஜோஸ் என்ற மகனும், வின்சென்ட்டுக்கு 20 வயதில் பல் மருத்துவம் படிக்கும் மகளும் உள்ளனர்.ஜோஸ் திருமணம் ஆனவர், 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தாலும், வின்சென்ட் மகளிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளம்பெண்ணை அடையவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அந்த இளம் பெண்ணோ ஜோஸின் விருப்பத்துக்கு மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், தாம் ஏற்றுமதி தொழில் செய்து வருவதால், அதை பற்றி சொல்லி தருவதாக வீட்டிற்கு இளம்பெண்ணை கூப்பிட்டுள்ளார். பல நாள் தவிர்த்து வந்த நிலையில், போன வாரம் ஜோஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் இளம்பெண். வீட்டுக்குள் நுழைந்ததும், இளம்பெண்ணிடம் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஜோஸ். கட்டிப்பிடித்து, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தவும், அதிர்ச்சியானார் இளம்பெண். விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.. இஸ்ரோ எடுக்கும் புதிய முயற்சி உடனே “நான் உங்களை காதலிக்கிறேன், இதை பற்றி நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அதற்குள் நீங்கள் இப்படி அவசரப்படுகிறீர்களே. நம்ம 2 பேர் வீட்டிலும் பேசி, பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்று எதைஎதையோ சொல்லி, அங்கிருந்து உடனே தப்பித்து வெளியேறி விட்டார். வீட்டிற்கு வந்து, தந்தை வின்சென்ட்டிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, வின்சென்ட் மாதவரம் போலீசில் பாலியல்புகார் கொடுக்கவும், ஜோஸை கைது செய்து விசாரித்தனர்.அப்போதுதான், பல திடுக் விஷயங்கள் ஜோஸ் பற்றி தெரியவந்தது. வசதியான, கல்லூரி மாணவிகளை குறிவைத்து, தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கூறி, பலரை ஏமாற்றி அவர்களின் வாழ்வை சீரழித்து உள்ளார் ஜோஸ். இதையடுத்து, போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?பணிநியமன ஆணை கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.
?சென்னை டிபிஐ வளாகத்தில் TRP இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?பெரம்பலூர் அருக தனது நிலத்திற்கு செல்லும் பாதை
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரம் அடைந்த பிச்சை பிள்ளை என்ற விவசாயி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக செல்ல உள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டுச் செப்டம்பர் 11-ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.வரும் செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரனின் 62-வது குருபூஜை நடைபெற உள்ளது. எப்போதும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செலுத்தப்படும். அதன் பிறகு அனைத்து கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர். இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இன்று முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மற்ற தலைவர்களின் நினைவிடங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மு.க.ஸ்டாலின் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு இதுவரை வரை சென்றதில்லை. இதன் காரணமாகவே எம்.பி.தேர்தலில் அனைத்து இடங்களிலும் முழுமையாக வெற்றிபெற்ற திமுக இடைத்தேர்தல்களில் போதிய இடங்களில் வெற்றி பெறவில்லை என்பதை திமுக தரப்பு உணர்ந்தது. அதே நேரத்தில் திருச்சி வழக்கிறஞர் பொன்.முருகேசன் மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து கடந்த காலத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார். அப்போது திருச்சியில் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உதவியுடன் இந்த வருடம் நடக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திடத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளார்.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??
பேரறிவாளன் விடுதலை விவகாரம்: அற்புதம்மாள் என்னுயிர் இருக்கும்போதே விடுதலை கோப்பில் மை படட்டும் என பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்தார். அப்போது அவர் அங்கு மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.’அம்மா சாவில் கூட இல்லை’.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோஎழுவர் விடுதலைஇவர்களின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கின்போது தமிழக அரசே எழுவரின் விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.ஆளுநர்இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டுநிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ?நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே!29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்;என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!அமைச்சரவைஇதனால் என்ற ஹேஷ்டேக் டிரென்டிங் ஆனது. இந்த நிலையில் இனந்த ஹேஷ்டேக்கை கொண்டு அற்புதம்மாள் டுவிட்டரில் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு.மை படட்டும்நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக் கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே! 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்! என தெரிவித்துள்ளார்.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?முதல் பழங்குடியினப் பெண் பைலட்.
?ஒடிசாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட்டாக அனுப்ரியா லக்ரா பணி அமர்த்தப்படவுள்ளார்.
?அவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®®இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது
8 கோடியில் இருந்து பத்து 10 கோடியாக உயர்த்தபட்டுள்ளதாக தகவல்
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?சென்னை மற்றும் புறநகரில் இருந்து தினமும் சராசரியாக 4 பேர் வரை டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்
?சுகாதாரத்துறை
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®®தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு..
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?இந்தியாவின் வனப்பரப்பு அதிகரிப்பு.
?2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் வனப்பரப்பு 20 லட்சம் ஏக்கர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி.
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
? ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ ஆயத்தம்
? காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் விவரங்கள், வாக்குமூலம் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும்: கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி: உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® 94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: 94-வது பிறந்தநாளை ஒட்டி எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து மாலை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® ஸ்ரீநகரிலிருந்து டெல்லி எய்ம்ஸ்க்கு மார்க்க்சிஸ்ட் தலைவர் யூசஃப் தாரிகாமி மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீநகரிலிருந்து டெல்லி எய்ம்ஸ்க்கு மார்க்க்சிஸ்ட் தலைவர் யூசஃப் தாரிகாமி மாற்றப்பட்டார். ஸ்ரீநகரில் விட்டு காவலில் இருந்த யூசஃப் தாரிகாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் எய்ம்ஸ்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஏற்கனவே ஸ்ரீநகர் சென்று யூசஃப் தாரிகாமியை சீதாராம் யெச்சூரி சந்தித்துள்ளார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் காமராஜ்
சென்னை: தற்போது தமிழகத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பொதுவிநியோக திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® பிரிட்டிஷ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
டெல்லி: பிரிட்டிஷ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® பூமியை புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம்: பிரதமர் மோடி
டெல்லி: டெல்லியில் நடைபெறும் விளைநிலம் பாலைவனமாவதை தடுப்பது தொடர்பான ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசி வருகிறார். பூமியை புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம் என்று கூறினார். பருவநிலை மாற்றங்களால் சுற்றுசூழல் நெருக்கடிகள் ஏற்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® மதுராந்தகம் அருகே பேருந்தை நிறுத்தவில்லை என கூறி அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது
காஞ்சிபுரம் : மதுராந்தகம் அருகே பேருந்தை நிறுத்தவில்லை என கூறி அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது: டி.ஆர்.பாலு எம்.பி.
சென்னை: தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது என்று டி.ஆர்.பாலு எம்.பி தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்கள் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® சென்னை எண்ணூர், ஓசூர் ஆகிய தமிழகத்தில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்
சென்னை: சென்னை எண்ணூர், ஓசூர் ஆகிய தமிழகத்தில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எண்ணுரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வந்துள்ளது. ஓசூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் என தகவல் வந்துள்ளது.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® சிவகங்கை எஸ்.பி. அலுவலகம் அருகே ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி. அலுவலகம் அருகே ரவுடி ராஜசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி கொலை வழக்கில் சரவணன், மணிகண்டன், பரமசிவம் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் வீடு சூறை
மன்னார்குடி: மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த பெண்ணின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகலாதேவி என்பவர் வீடு மீது தாக்குதல் நடத்திய பெண்கள் நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்த திருப்பூரை சேர்ந்த நவீன்குமார் (22) திருப்பூரில் உள்ள ரேவதி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்துள்ளார்.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®® இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிவு
டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிந்து 1,15,957 ஆக உள்ளதாக ‘சியாம்’ தகவல் அளித்துள்ளது. இந்திய வாகனத் தயாரிப்பாளர் சங்கமான சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-வது மாதமாக கார் விற்பனை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த விற்பனை 2019 ஆகஸ்டில் 1,15,957 ஆக குறைந்துள்ளது என சியாம் கூறியுள்ளது.
®®ஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®®பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்
111-வது பிறந்தநாள் விழா:
15.09.2019 அன்று சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு,
கழக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
WinmeenNewsஊடகதளம்
[9/9, 3:54 PM] விண்மீண்தீநியூஸ்: ®®ஐஸ்வர்யாராய் பற்றி மீம்ஸ் ஒன்றிற்கு நெகட்டிவ்வான கருத்து தெரிவித்த விவேக் ஓபராய்க்கும் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் பனிப்போர் நடந்து வந்தது பாலிவுட்டில் அனைவரும் அறிந்ததே தற்போது ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட இருவரும் ஆரத்தழுவி நட்பை புதுப்பித்துக் கொண்டனர்
?WinmeenNews?®ஊடகதளம்?