தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஓடும் காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு✍️எட்டயபுரம் பகுதியில் பரபரப்பு✍️விரைவாக நடவடிக்கை எடுத்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ்க்கு விண்மீன்நியூஸின் வாழ்த்துக்கள்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

எட்டயபுரம் அருகே ஓடும் காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு*

advertisement by google

எட்டயபுரம்:

advertisement by google

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாபுலால் பாய் (வயது 63). இவரது மனைவி பரிதா பேகம் (52). இவர்களுடைய மகனுக்கும், தூத்துக்குடியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ளனர். அவர்களை அழைத்து செல்வதற்காக பாபுலால் பாய், பரிதா பேகம் ஆகிய இருவரும் நேற்று காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை அவர்களது உறவினர் முகம்மத்தஸ்மின் அயாஸ் (26) என்பவர் ஓட்டினார்.

advertisement by google

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகம்மத்தஸ்மின் அயாஸ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். பின்னர் பாபுலால் பாய் உள்ளிட்ட 3 பேரும் காரில் இருந்து இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் விரைந்த வந்து, காரில் பிடித்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

advertisement by google

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாபுலால் பாய் உள்ளிட்ட 3 பேரும் வேறொரு காரில் அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button