இரவுவிரிவானசெய்திகள்(18.9.2019)ரஜினி பரபரப்புபேட்டி
????விண்மீண்நியூஸ்?????பொதுவான ஒருமொழி இருந்தால், நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது.
துரதிருஷ்ட வசமாக நம் நாட்டில் பொதுவான ஒரு மொழி என்பதை கொண்டு வர இயலாது – ரஜினிகாந்த்.
’இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது’ – ரஜினிகாந்த்.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: மதுரை ஆவின் தலைவர் தமிழரசன் அரசு வாகனத்தையோ, அலுவலகத்தையோ பயன்படுத்தக் கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை, கருப்பு மை கொண்டு அழித்த 22 பேர் கைது.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: புதுக்கோட்டை மாவட்ட தனிப்பிரிவைச் சேர்ந்த 2 காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 7 காவலர்கள் பணியிடமாற்றம் – டிஜிபி திரிபாதி உத்தரவு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
கடலூர், நாகை, புதுச்சேரி, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானால் கடும் நடவடிக்கை.
மொபைல் செயலியில் 11ஆம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆனதை அடுத்து அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு:
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
– வானிலை ஆய்வு மையம்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.
திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்-வானிலை ஆய்வு மையம்.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: திருச்சி : திருவானைக்காவல் பகுதியில் மகளின் பள்ளி தோழியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் நடராஜன்(37)-க்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி விடுதலை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை பதிவு செய்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யாததாக தொடரப்பட்ட வழக்கில் கே.சி.பழனிசாமி விடுதலை.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: நாகை : வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 11 பேர் மீது குண்டாஸ்
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: “குற்றவியல் வழக்குகளின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்”
தவறும் பட்சத்தில் விசாரணை அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
விசாரணை அதிகாரிகள் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தடைபடுவதாக நீதிபதிகள் கருத்து.
அதிக வழக்குகள் தேக்கமடைவதாகவும் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு கருத்து.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ????மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3.32 லட்சம் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: மதுரையில் 5கோடி மதிப்பு நில அபகரிப்பு – திமுக மாநில நிர்வாகி கைது
மதுரை பை-பாஸ் SRV சுரேந்திரன் நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான 5கோடி மதிப்பிலான வாரிசு சொத்தை போலியான ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயன்ற வழக்கில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில், பத்திர அலுவலக சார் பதிவாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட 24பேர் மீது மத்திய குற்றபிரிவு போலிசார் வழக்குபதிவு
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ????தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் மாணவர்கள் 2 நாளாக நடத்தி வந்த போரட்டம் வாபஸ்
தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள் 2 நாளாக நடத்தி வந்த போரட்டம் வாபஸ் பெறப்பட்டது. மறு அறிவிப்பு வரும் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்று நிர்வாகம் கூறியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ?⭕⭕?தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டு
தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டியுள்ளார். காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள டி.ஜி.பி.யும் இதற்கு துணை போகிறாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ????கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி
கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணையின் 3-ம் கட்ட சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரைக்கு அப்பால் 90கி.மீ தொலைவில் இருந்த இலக்கை குறிதவறாமல் அஸ்திரா ஏவுகணை தாக்கியது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. விமானப்படையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து சோதனையை நடத்தியதாக டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ????ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் கு.க.செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என கோரிய மனு தள்ளபடி
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் கு.க.செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரிய மனு தள்ளபடி செய்யப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: மதுரை ஆவின் தலைவர் தமிழரசன் அரசு வாகனத்தையோ, அலுவலகத்தையோ பயன்படுத்தக் கூடாது -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: மானாமதுரை கனரா வங்கியில், துப்பாக்கிச் சூடு!
வங்கி வாடிக்கையாளரை அரிவாளால் வெட்ட வந்த ஒருவரை, காவலாளி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு.
முன்விரோதம் காரணமாக தங்கராஜ் என்பவரை மர்மநபர் அரிவாளால் வெட்ட வந்த போது சம்பவம்.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ?✍✍?நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு: மருத்துவ கல்வி இயக்குநர்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வெளியிட்ட நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். புகார்தாரர் தந்த புகைப்படங்களை போலீசிடம் அளித்துள்ளோம் எனவும் கூறினார். ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் சேர்க்கை வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: தருமபுரி :
பெரியார் பிறந்த நாள் விழாவான நேற்று அவருடைய உருவ படத்தின் முன்பு மாட்டு சாணத்தை கேக் வைத்து வெட்டுவது போல வீடியோ பதிவு செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக அரூர் அடுத்த நம்பிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவர் மீது அரூர் காவல்நிலையத்தில் திக விசிக உள்ளிட்ட கட்சியினர் புகார்.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ????சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரூ.4.5 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. மழைநீர் வடிகால் மற்றும் அது தொடர்பான 45 விதமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
?©®?
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: சந்தேகத்தின் அடிபடையில் கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞர் விடுவிப்பு
ஏர்வாடி தர்ஹா பகுதியில் காவி உடை அனிந்து சாமியார் போல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தவரை பிடித்த காவல் துறையினர் ஏர்வாடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பெயர் அப்துல் வகாப் என்றும் தந்தையின் பெயர் முனாப் எனவும்,தெரியவந்தது பின்னர் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை இராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அப்துல் வகாப் வீட்டு முகவரியில் விசராணை செய்யும்மாறு கேட்டு கொண்டதின் பெயரில் அம்மாநில போலிஸார் சங்கிலி மாவட்டத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அந்த பகுதி காவல் நிலையத்தில் அப்துல் வகாப் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் சிறப்பு தொழுகைக்காக ஏர்வாடி தர்ஹா வந்ததாகவும் அவர் சமீபமாக இதை போல் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததையடுத்து மகாரஷ்டிரா Anti Direction Squard என்ற காவல் பிரிவின் கீழ் சென்னை தலைமை காவல் கட்டுபாட்டு அறைக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து கடிதத்தின்
நகல் இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளது அந்த கடிதத்ததின் அடிபடையில் அப்துல் வகாப் விடுவிக்கப்பட்டு அவரது சொந்த மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்கபடவுள்ளார்.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ??மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சம் நடைபெற்று வருவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அவர்களுடன் இணைந்து பத்திர பதிவுத்துறை ஆய்வுக் குழுவும் இன்று மதியம் திடீரென நுழைந்து ஆய்வு நடத்தியது. லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் தலைமையில் நான்கு பேர் பத்திரப்பதிவு ஆய்வு குழுவினர் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் அதிரடியாக உள்ளே நுழைந்து கதவுகளை அடைத்து ஆய்வு நடத்தியது.
இதில், பத்திரப்பதிவு செய்ய பொதுமக்களிடம் முறைகேடாக வாங்கிய கணக்கில் வராத சுமார் 3.32 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பத்திரப்பதிவு செய்ய பல்வேறு வழிகளில் சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் லஞ்சம் பெற்றது உறுதியானது, இதனையடுத்து 3.32 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு இரவு வரை தொடர வாய்ப்புள்ளது. ஆய்வுக்குப் பின்னரே முறைகேடுகள் குறித்து விசாரணை முடிவடைந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வழக்கமான அலுவல் நேரம் வரை பத்திரப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 19.9 19 வியாழக்கிழமை காலை 9 to 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது..
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரம்
அருகே உள்ள கள்ளிமந்தயத்தில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய நவீன விவசாய கருவிகள் கண்காட்சியில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு நவீன இயந்திரங்களை கண்டு ரசித்தனர்.
இதில் களை எடுத்தல் இயந்திரம் மருந்து தெளிப்பான் இயந்திரம் உள்ளிட்ட
பல நவீன இயந்திரங்கள் விவசாயிகளின் கண்காட்சிக்காக வைக்கப்பட்டனர்..
[9/18, 8:27 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING
?winmeennews.com?உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
?winmeennews.com?ஊடகதளம்