கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பிளம்பர் உயிரிழந்தார்.
கோவில்பட்டி சீனிவாச அக்ரஹார பகுதியைச் சேர்ந்த 59 வயது பிளம்பருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த வாரம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அவர் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சலும், மூச்சுத் திணறலும் இருந்துள்ளது.
உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். கோவில்பட்டி நகர பகுதியில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று கரோனா வைரஸ் தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.