t

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு வந்த சோதனை மேல் சோதனை✍️… கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நடிகர் செந்திலுக்கு வந்த சோதனை… கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

advertisement by google

நகைச்சுவை நடிகர் செந்தில் தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத கலைஞராக இருந்தவர். வயதாகிவிட்ட நிலையில் திரைப்படங்களில் இருந்து தன்னை சற்று தூரப்படுத்திக்கொண்டவர் அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். அதன்படி, ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். அதன்பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் இணைத்துக்கொண்டார்.

advertisement by google

அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு மாறினார். இந்நிலையில், தமது பெயரில் போலி டிவிட்டர் கணக்கை யாரோ துவக்கி அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

advertisement by google

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பது தெரிவிக்கும் விதமாக டிவிட்டரில் நடிகர் செந்தில் பதிவிட்டதை போன்று செய்தி வெளியானது.

advertisement by google

ஏற்கனேவே இரு குழந்தைகள், 3 கணவன்கள்… இது தெரியாம காதலித்து திருமணம்…

advertisement by google

அந்த ட்வீட்டில், ” மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா? தயவு செய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது பெயரில் போலி கணக்கை தொடக்கி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க யாரோ முயற்சிப்பதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் கொடுத்துள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button