t

கோவில்பட்டியில் பெண் துப்பரவு பணியாளருக்கு கத்தி குத்து – போலீசார் விசாரணை?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் பெண் துப்பரவு பணியாளருக்கு கத்தி குத்து – போலீசார் விசாரணை

advertisement by google

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் துப்பரவு பணியாளரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

advertisement by google

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கண்ணதாசன்(50). நையாண்டி மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள்(45). நகராட்சி துப்பரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வேலைக்கு சென்று திரும்பிய மாரியம்மாளுக்கும், கண்ணதாசனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றிய நிலையில் கண்ணதாசன், கத்தியால் மாரியம்மாளை கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரி குத்தினாராம். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மனைவியை கொல்ல முயன்ற கணவரை தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button