சென்னையில் டியூசன் சென்ற10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை73 வயது முதியவர் கைது?
♦சென்னையில் டியூசன் சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 73 வயது முதியவர் கைது
?சென்னை அம்பத்தூரில் உள்ள லெனின் நகரில் இரண்டாவது மெயின் ரோட்டில் வசித்து வரும் தம்பதியருக்கு 6 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
?இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதி மாலை ட்யூசன் புறப்பட்டுச் சென்று வீடு திரும்பும் போது, பத்தாவது மெயின்ரோடு வழியாக வீடு திரும்பும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி வயது 73 என்பவர் 10 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
?இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியின் சத்தம் கேட்டு ஓடி வந்த போது சுந்தரமூர்த்தி அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
?விரைந்து வந்த பொதுமக்கள் சிறுமிகள் இருவரையும் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது சம்பவத்தை சிறுமிகள் பெற்றோரிடம் கூறினார்.
?இதனைத்தொடர்ந்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சுந்தரமூர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
?இதனைத் திறந்து அவரை போலீசார் அம்பத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.