தலையில் போலீஸ் அதிகாரியின் தொப்பியுடன்,இளம்பெண் மடியில் காசி? ஜாலியாக செல்பி, வீடியோ எடுத்து நூற்றுக்கணக்கான பெண்களிடம் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
காசி ஒரு இளம்பெண்ணின் மடியில் படுத்துள்ளார்…….
தலையில் ஒரு போலீஸ் அதிகாரியின் தொப்பி அணிந்திருக்கிறார்……
அப்படியே ஜாலியாக ஒரு செல்பியும் எடுத்து வைக்க,
அந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது!!
பெண் டாக்டரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் வரவும்தான் காசியை பற்றியை அனைவருக்கும் தெரியவந்தது…..
நூற்றுக் கணக்கான பெண்களை மிரட்டி இப்படியே பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவருக்கு 2 நண்பர்கள் உதவிய நிலையில், 19 வயதுடைய ஒரு நண்பர் கைதாகி விட்டார்,
இன்னொரு நண்பரை கைது செய்ய முயற்சி நடந்து வருகிறது.
காசியின் லேப்டாப்பில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்..
ஒரு நடிகரின் மகளையும் காசி தன் வலையில் விழ வைத்ததாக சொல்லப்பட்டது..
அதேபோல ஒரு காவல்துறை அதிகாரியின் மகளையும் ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக சொல்லப்பட்டது..
அவர் வெளி மாவட்டத்தைவர் என்றும், அந்த அதிகாரி நாகர்கோவிலில் வந்து தங்கியிருந்தபோதுதான், காசி அவரது வீட்டிற்கும் சென்று வந்ததாக சொல்லப்பட்டது.
அப்போதுதான் அவரது பெண்ணுடன் தொட்ரடர்பு ஏற்பட்டுள்ளது.. அதற்கு பிறகு அந்த அதிகாரி டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் ஏற்கனவே கசிந்தன.
இதுவரை இந்த காவல்துறை அதிகாரியும், அந்த நடிகரும் யார் யார் என தெரியவில்லை.
இதைதவிர மற்றொரு போலீஸ் அதிகாரியின் மகனுடனும் காசிக்கு நட்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காசியின் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது..
போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை தலையில் மாட்டி கொண்டு, ஒரு இளம்பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் காசி..
அந்த சமயத்தில் இவர் ஒரு செல்பியை எடுக்க, அந்த போட்டோக்கள் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.
பிஞ்சுகளையும் விட்டு வைக்கலை.. கல்யாணமான பெண்களையும் விடலை.. காசியின் வெறி.. ஷாக் ஆதாரங்கள்!
அந்த அதிகாரியின் வீட்டிற்கு காசி சென்றபோது இந்த போட்டோ எடுத்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது..
காசி விவகாரத்தில் போலீசார் மிக துரிதமான, அதே சமயம் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.
அதனால் எப்படியும் காசியால் ஏமாற்றப்பட்ட பல பெண்களின் கண்ணீர், துயருக்கு நிச்சயம் ஒரு விடிவு ஏற்படும் என்றே நம்பப்படுகிறது.