டாஸ்மாக்கடைகளை திறக்கக்கூடாது என்று இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் அவர்கள் தலைைமையில் மனு அளிக்கப்பட்டது? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்
டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது – இந்திய கம்யனிஸ்ட் கட்சி கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் ஊரடங்கு கால நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள அரசு மதுபானக் கடைகளை(டாஸ்மாக்) மீண்டும் திறக்கக் கூடாது.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரசால் பணி மறுக்கப்பட்டுள்ள 55 வயதானவர்களுக்கும், அதே பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல கூலி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.