கோழி வியாபாரி மகன் பாலியல் படம் எடுத்து மிரட்டல்? பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் புகார்? பலபெண்களிடம் பாலியல் உறவு அம்பலம்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
பாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல் – ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார்
நாகர்கோவிலை சேர்ந்த பிரபல கோழி வியாபாரியின் மகன் காசி, சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்.
அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி.
பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான்.
இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார்.
அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.