இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மூன்று பெண்டாட்டிகாரன் நான்காவது காதலுக்கு தூது?காட்பாடி அருகே பைனான்சியர் வெட்டி கொலை?4 பேர் கொண்ட கும்பல் கைது? முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

கட்டப்பா வீட்டு பெண்ணை 4-வது மனைவியாக்க காதல் வலை வீசியவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

advertisement by google

வேலூர்மாவட்டம் கொசப்பேட்டை சுந்தரேச சாமிகோவில் மாணியம் பகுதியைச் சேர்ந்தவர் பைனான்சியர் உதயகுமார்..!38 வயதான உதயகுமாருக்கு 3 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான அடிதடி வழக்குகள் உள்ளன.

advertisement by google

இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டப்பகலில் உதயகுமார் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

advertisement by google

அவரது சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.

advertisement by google

உதயகுமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பல் வாகனத்தில் வெளியூர் செல்ல வழியில்லாததால் காவல்துறையினருக்கு போன் செய்து தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்தனர்

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் இம்மானுவேல், கட்டப்பா என்கிற நவீன்குமார் , அந்திரியாஸ், நிர்மல் ஆகியோரை பிடித்து விசாரித்த போது பைனான்சியர் உதயகுமார் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது

கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த உதயகுமாருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், அவரது காதல் வலையில் நான்காவதாக கட்டப்பா என்கிற நவீன்குமாரின் உறவுக்கார பெண் ஒருவரும் விழுந்ததாக கூறப்படுகின்றது.

அந்த பெண் உதயகுமார் மீது உயிரையே வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனையறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், உதயா தங்கள் வீட்டு பெண்ணின் மனதை கெடுத்து விட்டதாக கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் உதயகுமாரைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்து வந்த அந்த பெண் இரு தினங்களுக்கு முன்பு, தனது வீட்டில் இருந்து வெளியேறி உதயகுமார் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகின்றது

உதயாவின் மனைவிகள் அந்த பெண்ணுக்கு புத்தி சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்

இருந்தாலும் அந்தப்பெண் உதயா மீது தீராத காதலில் இருந்துள்ளார். இதையடுத்து தங்கள் வீட்டுப்பெண் ரவுடிக்கு 4 வது மனைவியாகிவிடக்கூடாது என்ற ஆத்திரத்தில் உதயாவை வெட்டிக் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

மண்ணாசை பெண்ணாசை இரண்டுமே எல்லை மீறிப்போனால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி ..

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button