வன பகுதிக்குள் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தவரை கரடி கடித்து குதறியது?வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை? வனத்துறையினர் விசாரணை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஆம்பூர் அருகே வன பகுதிக்குள் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தவரை கரடி கடித்ததில் படுகாயம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வனத்துறையினர் விசாரணை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் காப்புக்காடு மாச்சம்பட்டு ரெட்டி கிணறு வனப்பகுதியில் கொத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அவருக்கு சொந்தமான கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு பாறை மீது அமர்ந்து கொண்டிருந்த போது அங்கு பாறையின் அருகே கரடி ஒன்று குட்டியை ஈன்று உள்ளது தெரியாமல் இவர் அமர்ந்துள்ளார் உடனடியாக அங்கிருந்த கரடி இவரை தலை மற்றும் கை கால் பகுதிகளில் கடித்துக் குதறி உள்ளது
உடனே அங்கு வனப் பகுதியில் இருந்த அப்பகுதியினர் இவரை மீட்டு ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து ஆம்பூர் வன அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தலை மற்றும் கைகளில் அதிகம் காயம் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்