பிரிண்டவுட் மிஷின் மூலம் ஆம்பூரில் கள்ளநோட்டு அடித்த கும்பல் கைது?
ஆம்பூரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது: கள்ள நோட்டுகள் பறிமுதல்10:47 am Mar 09, 2020 |
ஆம்பூரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது: கள்ள நோட்டுகள் பறிமுதல்
ஆம்பூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்த 2 பேரை மகாராஷ்டிரம் மற்றும் தமிழகக் காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ளநோட்டு அடித்ததாக இரண்டு பேரை கைது செய்த மும்பை குற்றப்பிரிவு துணை உதவி ஆய்வாளர் படேல் தலைமையிலான தனிப்படையினர், அய்யனூர் வீட்டில் இருந்து 7.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கள்ள நோட்டை மும்பையில் மாற்ற முயன்ற பாஸ்கர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.