கோவில்பட்டியில் செண்பகமலர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா?
கோவில்பட்டியில் சுதர்சனம் திருமண மஹாலில் செண்பகமலர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் 105க்கு மேலான மாற்றுத்திறனாளி அன்பர்களுக்கு பொங்கள் நலத்திட்டம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அணைவருக்கும் அரிசி பருப்பு , மளிகை சாமாண்கள் , உடைகள், மாற்று திறனாளிகளின் உபகரணங்கள் மற்றும் அண்ணதானமும் வழங்கப்பட்டது . விழாவில் மாற்று திறனாளிகளின் நிகழ்ச்சிகள் இனிமையாக நடைபெற்றன.அறக்கட்டளையின் நிறுவணர் வெங்கடேசன் தலைமை வகித்தார் , புனித ஓம் பள்ளிநிறுவனர் லட்சுமணபெருமாள் முன்னிலை வகித்தார், செண்பகராமன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், பாலசுப்பிரமணியம் தலைமையாசிரியர் Rtd மற்றும் சிவன் செண்பகராமஐயர் நன்றியுரையாகவும் , அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தை சார்ந்த ராஜ் அவர்கள் மற்றும் முன்னால் கவுண்சிலர் முனியசுவாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு வகித்தனர் நிகழ்ச்சி சீறும் சிறப்பாக நடைபெற்றன.