தொழிலதிபர் வீட்டில் இறந்த காவலாளியை யாரையும் நெருங்க விடாமல் இருந்து, இறந்த வளர்ப்பு நாய் – பாசப்போராட்டம்?
டில்
?நெல்லையில் தொழிலதிபர் ஒருவரது வீட்டின் காவலாளி மர்மமான முறையில் இறந்த நிலையில், அவரது உடலை நெருங்க விடாமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய், உடலை மீட்கும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தது
பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரின் வீட்டில் பிரெசிலியன் மேஸ்டிஃப் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த வீட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த பன்னீர் செல்வம் என்பவர், வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று அதிகாலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்
தகவலறிந்து போலீசார் வந்தபோது பன்னீர் செல்வத்தின் உடலை நெருங்கவிடாமல் தடுத்து நாய் குரைத்துகொண்டே இருந்தது. 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுக்க முயன்றபோது அது வரமறுத்தது. வலுக்கட்டாயமாக இழுத்த போது நாய் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது