கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
கோவில்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா கிருஷ்ணசாமி ஆணைக்கிணங்க கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ் தலைமை தாங்கினார் .இதில் ஏழை எளிய மக்கள் விதவை கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி கிரிபாலா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குழந்தைவேலு, கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், லாசர் , ஒன்றிய விவசாய அணி செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கமாரி .கயத்தாறு ஒன்றிய செயலாளர் முருகைய்யா.கழுகுமலை நகரச் செயலாளர் நாகராஜ், ரேவதி நகைக்கடை உரிமையாளர் முருகன். முன்னாள் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பால் மாணிக்கம், முன்னாள் ராணுவவீரர் சுப்பையா, எல்ஐசி பால்துரை, வழக்கறிஞர் முத்துக்குமார், வில்லிசேரி பெருமாள்சாமி, தாமஸ்நகர் அமல்ராஜ் , மோசஸ் ,செல்வேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்