கோவில்பட்டி மண்ணின் மைந்தர் தமிழககாவல்துறையின் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனின் சமூகப்பணி மற்றும் மதுரையில் சட்ட ஒழுங்கை க்காக்கும் காவல்பணி? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
மதுரையில்ரவுடி கும்பல்கள் சழுகவிரோ த செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது ,அவ்வழியே மதுரை தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு போலீஸ் எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் ரோந்து சென்றார். போலீசார் வருவதையறிந்து கும்பல் தப்ப முயன்றது, அவர்களை சரணடைய எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார் , அடுத்த நொடி வீச்சறிவாள், கத்தியுடன் எஸ்ஐயை நோக்கி கும்பல் பாய்ந்தது , சுகாரித்து கொண்ட எஸ்ஐ ரிவால்வரை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார், என்கவுண்டர் பயத்தில் ஆயுதங்களை வீசிவிட்டு கும்பல் ஓட்டம் பிடித்தது, தனியொருவனாக விரட்டிச் சென்று எழுபேரையும் கைது செய்தார். அவரது துணிச்சலை அதிகாரிகள் பாராட்டினர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் 2008ல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார்.மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார், ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி மக்களிடம் நற்பெயர் எடுத்து வருகிறார், சமூகசிந்தனையுடைய எஸ்ஐ தனது இயக்கத்தில் வெல்வோம் என்ற குரும்படம் எடுத்தார் அதில் நடிகர்கள் சசிக்குமார், சமூத்திரக்கனி நடித்துள்ளனர். தனது முயற்சியில் பத்து இடங்களில் சிசிடிவி கேமாராக்களை பொருத்தி ரவுடிகளின் கண்காணிப்யை தொடர்ந்தார் அதனால் ரவுக்கும்பல் கேமாராக்களை உடைத்தனர், அவர்களின் பத்துரவுடிகளை சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்தில் கைது செய்து அவர்கள் மூலமாகவே மீண்டும் பத்து கண்கானிப்பு கேமராக்களை பொருத்தினார், கொரானா ஊரடங்கில் மாணவர்களுக்கு பயனுள்ளதால் சமூக விலகள் விழிப்புணர்ச்சி பெற கதை கட்டுரை கவிதை குறும்பட போட்டிகளை நடத்தி தனது சொந்த பணத்தில் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். சிவராமகிருஷ்ணன் உதவி ஆய்வாளரின் சேவைகளை மதுரை மாநகர கமிஷ்னர் டேவிட்சன்ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் பாராட்டி கெளரவித்தும் ஊக்கமளித்தும் வருகிறார்கள்