படம்வரைந்த ரசிகர்களை ஆறுதல் கூறி உற்சாகமூட்டும் காட்சி?விஜய் தகப்பனார் சந்திரசேகர் ?சிந்திப்போமா?
சிந்திப்போமா?
நம் இளையச் சமுதாயம் பொழுது போக்குக்காக மட்டும் சினிமாவைப் பார்த்துவிட்டு, தங்கள் கவனத்தை தத்தம் எதிர்காலத்தை வடிவமைக்க பயன்படுத்தாமல்,
-நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைப்பது/இணைவது…
-கொட்டகைகளில் படங்களை தேவையற்ற
ஆர்ப்பாட்டம் செய்து, பணமும், நேரமும்
வீணாக்கி கொண்டாடுவது…
- நடிகர் கட் ஔட்களுக்கு பாலூத்துவது,
- நடிகர்களுக்கு கட் ஔட் வைப்பது…
- படத்தால் எவனோ சம்பாதிக்க இவர்கள்
மண் சோறு சாப்பிடுவது… - பெற்ற ஏழை அப்பா அம்மா கஷ்டப்பட்டு
உழைக்கும் பணத்தை நடிகர்/நடிகை
பைத்தியத்தனத்திற்காகச் செலவு செய்வது…
-திரைப் படங்களில் தங்களின் தொழிலான
நடிப்பைச் நடிகர்கள் செய்வதை, இவர்கள்
நிஜம் என எண்ணிக் கொண்டு அவர்களுக்கு
அடைமொழி வைத்து, அவர்களை ஏதோ
சாமிகள் ஸ்தானத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவது…
-நடிகர்கள் பின்னால் வெறிபிடித்து அலைவது
-அவர்களுக்காக சண்டைகள் போடுவது
-தேவயற்ற பிரச்சனைகளில் ஈடுபடுவது
என
இப்படி நடிகர்கள் பின்னால் முழு நேரத்தையும்
வீணாக்கிக் கொண்டிருந்தால்
எப்படி ஒரு நல்ல தமிழ்ச் சமுதாயம் உருவாகும்?
நம் அடுத்த தலைமுறையாவது நல்லத்
தலைவர்களை தேர்ந்தெடுத்து நம் மண்ணில்
அறத்தை நிலை நாட்ட வேண்டாமா?
அதற்காக
நம் நாட்டின், நம் மண்ணின்,
நம் மக்களின், நம் மொழியின் வரலாறு,
நம் கலைகள், பண்பாடு, கலாச்சாரம்
நம் சமூகம்,
நம் சுற்றுச்சூழல்,
நாட்டு நடப்பு, அரசியல்,
நாட்டின் வருங்காலம்,
இது போன்றவற்றில் அவர்கள் சிந்தனைகள்,
நேரங்கள் போக வேண்டாமா?
சினிமா நடிகர்கள் பின்னால் போகும்
பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டியுங்கள்.
ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்.
வெறும் ஏட்டுச் சுரைக்காய்களை
உருவாக்காதீர்கள்.
பெரியவர்கள் அனைவரும்
நம் பிள்ளைகள் கவனம் சிதறாமல் இருக்க
அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வழிநடத்துங்கள்.
இது இப்போதைய நம் அவசரத் தேவை.