தமிழகம் இந்தியாஉலகசெய்திகள்19.10.2019
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: கோவையில் மருத்துவரை மிரட்டிய பத்திரிக்கையாளர்
2 பேர் கைது !
விஜயகுமார் சூர்யா கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த கே. ஜே மருத்துவமனை சித்த மருத்துவர் கண்ணன் என்பவரை நீங்கள் போலி மருத்துவர் என எங்களுக்கு தெரியும் என்றும் தங்களை பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க ரு.10000 வேண்டும் கேட்டு மிரட்டியதாக தகவல்.
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? உசிலம்பட்டி அருகே அரிவாளை காட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது
??மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது.
?? உசிலம்பட்டி அருகேயுள்ள சீமானத்துவிலக்கில் ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.19000 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்த நல்லமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
?? ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் நல்லமலையை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? அக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96
??சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
?? அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
?? இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??தீவிரவாதமும், ஊழலும் வேரூன்றி வளர இடம்கொடுத்தது காங்கிரஸ்
??1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் காயங்களும் வடுக்களும் ஆறவில்லை என்றும், அதனை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
??மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
??அப்போது 1993 தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
?? இந்த குண்டுவெடிப்பின் காயங்களை நம்மால் மறக்க முடியாது என்று கூறிய மோடி, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முந்தைய அரசுகள் நீதி வழங்கவில்லை என்று கூறிய பிரதமர், எதிரிகளை பிடித்து சிறையில் அடைக்காமல் அவர்களுடன் மிர்ச்சி வியாபாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சியினரை சாடினார்.
??தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு மும்பை இலக்கானதாக தெரிவித்த மோடி, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
??துல்லியத் தாக்குதல், பாலகோட் வான் தாக்குதல் போன்றவை வெறும் சொற்கள் அல்ல என்றும் அவை பாஜகவின் அரசியல் கொள்கைக்கான அடையாளங்கள் என்றும் மோடி தெரிவித்தார்.
??மேலும் சட்டப்பிரிவு 370, 35 ஏ போன்றவற்றை பல ஆண்டுகளாக நீக்காமல் வைத்திருந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தீவிரவாதமும் ஊழலும் வேரூன்றி வளர இடம் கொடுத்ததாக பிரதமர் விமர்சித்தார்.
??வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து சட்டப்பிரிவு 370 ஐ நீக்கிய போதும் எதிர்க்கட்சியினர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசாமல் குரலில் பேசி வருகின்றன என்றும் சாடினார்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??“லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்…!”
??திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல்…!
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN
??மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34,722 கனஅடியிலிருந்து 27,985 கனஅடியாகக் குறைந்தது
??மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 87.64 டிஎம்சியாக இருக்கிறது
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN
??சாலைகள் மோசமாக இருந்தால் சென்னை சிங்கப்பூராக மாற 1000 ஆண்டிகளாகும்
??தரமில்லாத சாலை அமைப்பு, ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுமே மோசமான சாலைக்கு காரணம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை
??கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
?? தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடைவித்துள்ளனர்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??கொட்டும் மழையில் சரத்பவார் பிரசாரம்
??மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
??இந்நிலையில் சாட்ரா பகுதியில் கொட்டும் மழையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு சரத்பவார் ஆதரவு திரட்டினார்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? கள்ளிப்பட்டி சஞ்சீவராயன்குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் ஈரோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
??ஈரோடு: வளையபாளையம், எரங்கட்டுர், கரும்பாறை உள்ளிட்ட 5க்கும் அதிகமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
?? கள்ளிப்பட்டி சஞ்சீவராயன் குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
?? சஞ்சீவராயன் உபரிநீர் ஓடை அருகே வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
.
??பொதுமக்கள் ஓடையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? சென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு: 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
??சென்னை: சென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
??ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மக்கள் மர்மக்காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.
?? மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? கடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை
??கடலூர்: கடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
?? சிறையில் கஞ்சா, ஆயுதங்கள், செல்போன், தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
?? மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?
??மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைவு
??சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைந்தது.
??மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடி, நீர் இருப்பு 87.65 டி.எம்.சியாக உள்ளது.
??டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது மசூதியின் அருகே நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 65 பேர் உயிரிழப்பு.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ?? கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
??ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
?? தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 5,250 கனஅடி நீர் செல்வதால் கொடிவேரி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
?? எனவே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??தமிழ்நாடு
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
??சென்னை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
??சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.
?? சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலையும் இரவிலும் மழை பெய்தது.
?? இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
?? ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.
?? பவானி லட்சுமி நகர் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.
?? திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தின் இதரப் பகுதிகளான சீலப்பாடி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.
?? கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம், களியல், பேச்சிப்பாறை, மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
?? கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் களியல் சப்பாத்து பாலம் மூழ்கியது.
?? கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது.
?? நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
?? குன்னூர் – ஊட்டி இடையிலான சாலையிலும் குன்னூர் – கோத்தகிரி இடையிலான நெடுஞ்சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தன.
??உதகை – மேட்டுப்பாளையம் , குன்னூர் – மேட்டுபாளையம் சாலைகளில் 18 இடங்களில் மண்ணும், பாறையும் சரிந்து விழுந்தன.
??ஊட்டி மஞ்சூர் சாலையில் குந்தா அருகே ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
??தொடர் மழை காரணமாக குன்னூர், ஊட்டி, குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
?? குன்னூரில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் மண்ணில் புதைந்தன.
?? இதனிடையே, வெப்பசலனம் மற்றும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அஹமது நீக்கப்பட்டார்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
??ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
??சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
??ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??அண்ணாநகர் டவர் கிளப் நிலத்தை காலி செய்ய நடவடிக்கை
??சென்னையில் அண்ணாநகர் டவர் கிளப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை காலி செய்யும் படி மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
?? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளப் சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
??வழக்கு விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி – அதிகாரிகள் ஆய்வு
??ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
??இதற்காக சென்னையிலிருந்து பாம்பன் சென்ற ரயில்வே அதிகாரிகள் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர்.
??பழுதடைந்த ரயில்வே பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைப்பதற்காக, அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN
??திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசன் தந்த தகவலின்பேரில் 3 பேரைபிடித்து விசாரணை
??ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் மதுரையை சேர்ந்த 3 பேரை பிடித்து வங்கிக்கொள்ளை பற்றி விசாரணை நடக்கிறது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: JUSTIN
??திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்
??கணேசன் அடையாளம் காட்டியதை தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த சுற்றுலா வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??2 தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்குப் போய்விடும்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்குச் செல்வது உறுதி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
??ஊடகதளம்
[10/19, 7:12 PM] விண்மீண்நியூஸ்2: ??சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் அமிதாப்பச்சன்
??பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று அதிகாலை 2 மணிக்கு மும்பை நானாவதி மருத்துவமனைக்கு வேகமாக அழைத்து வரப்பட்டார்.
??முதலில் வழக்கமான செக்அப் என தெரிவிக்ப்பட்டது. பின்னர் நுரையீரல் பிரச்சனைக்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
??இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அமிதாப்பச்சன் நேற்றிரவு வீடு திரும்பினார்.
? winmeennews.com?ஊடகதளம்