கோவில்பட்டி புதுரோடு பெத்தேல் வளாகத்தில் ஒய்.எம்.சி.ஏ சார்பில் மகளிர் தினவிழா✍️ விழாவிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை✍️ துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் பெஞ்சமின், ஓய்வு பெற்ற கலால் துறை அதிகாரி ஞானக்கண் செல்லையா ஆகியோர் முன்னிலை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி ஒய். எம்.சி.ஏ சார்பில் மகளிர் தின விழா
கோவில்பட்டி புதுரோடு பெத்தேல் வளாகத்தில் ஒய்.எம்.சி.ஏ சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் பெஞ்சமின், ஓய்வு பெற்ற கலால் துறை அதிகாரி ஞானக்கண் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலர் மேத்யூ வரவேற்றார்.
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பத்மாவதி மற்றும் பசுவந்தனை காவல் ஆய்வாளர் திருமதி சித்ரகலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகளிர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
நகர்மன்ற உறுப்பினர்கள் திருமதி ஏஞ்சலா , உலகராணி, கலைமாமணி விருது பெற்ற ஆசிரியர் அமல புஷ்பம் , கோவில்பட்டி இன்னர் வீல் கிளப் தலைவர் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், ஒய்.எம்.சி.ஏ செயற் குழு உறுப்பினர்கள் லெஸ்லின் சாந்தகுமார், ரூபன் குருபிரசாத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஒய் எம் சி ஏ பொருளாளர் கிப்ட்சன் இம்மானுவேல் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெத்தேல் கண்காணிப்பாளர் திருமதி ஷைலா மேத்யூ, ஆசிரியர் ஜெயசெல்வி, வழக்கறிஞர் முத்துமாரி, டாக்டர் பத்மாஷினி, அம்பிகா ஆகியோர் செய்திருந்தார்கள்.