அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
துன்பத்தை அனுபவித்தக் காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்தப் பாடத்தை மறந்து விடாதே.
ஒருமுறை வந்தால் கனவு… இருமுறை வந்தால் ஆசை… பலமுறை வந்தால் லட்சியம்…
உலகம் உன்னை அறிவதை விட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்.
வெற்றி என்பது உன் நிழல் போல நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்.
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. உன்னைக் கொன்று விடும். கண்ணைத் திறந்து பார்; காணாமல் போய் விடும்.
வித்தியாசமாக சிந்திக்க துணிவு கொள்ளுங்கள்.
புதுமையான கண்டுபிடிப்புகளில் இறங்கத் துணியுங்கள்.
யாரும் போகாத பாதையில் பயணிக்கத் துணியுங்கள்.
சாத்தியமில்லாதது என்பதை இல்லாமல் ஆக்கத் துணியுங்கள்.
பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று துணிவு கொள்ளுங்கள்.
கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரேமாதிரி வாய்ப்புகள் உள்ளன.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல… உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு.