தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்- சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/05/Screenshot_20240524-100100-780x470.jpg)
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/05/Screenshot_20240524-100100-780x470.jpg)
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தினத்தந்தி நாளிதழின் நிர்வாக தலைமை பொது மேலாளர் சந்திரன், தினத்தந்தி மனிதவள தலைமை பொது மேலாளர் விஜயராஜ், தலைமை பொது மேலாளர் தனஞ்செயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜிபி சந்தோசம் மற்றும் பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.