அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை , மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பா. அன்புராஜ் அவர்கள் நேரடியாக சந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் ,அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகநிறுவனத் தலைவர் பா. அன்புராஜ் அவர்களும் நேரடி சந்திப்பு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு
வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழக முழுவதும் நடைபெற உள்ளது இந்நிலையில்பல்வேறு கட்சிகள் கூட்டணி மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பா. அன்புராஜ் தலைமையில்கழக நிர்வாகிகள்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்
சந்தித்தனர்
பின்புவருகின்ற மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரவை தெரிவித்தனர்
நிகழ்வின் போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு எஸ்.பி.சண்முகநாதன் அவர்களும் வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,அவர்களும் உடன் இருந்தனர்
இதில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் ,மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி,
மாநில மகளிர் அணி துணை செயலாளர்
சரிதா,
கயத்தாறு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி , கோவில்பட்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கோகுல், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணி, கோவில்பட்டி மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி
மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்