இருக்கையில் பயணி மலம் கழித்ததால் விமானம் முழுவதும் துர்நாற்றம்
அட்லாண்டா: அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்நாட்டுப் பயணம் மேற்கொண்ட ஒருவர், இருக்கையில் மலம் கழித்த சம்பவம் கிறஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் நிகழ்ந்தது.
அலபாமாவில் இருந்து அட்லாண்டாவுக்குச் சென்ற அந்த விமானத்தில் பயணம் செய்த ரெட்டிட் பயனாளர் ஒருவர் இச்சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
விமானம் புறப்பட்ட பிறகு விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசியதைக் கண்டறிந்த அப்பயனாளர், தம் எட்டு வயது மகள்தான் மலம் கழித்துவிட்டதாக நினைத்தார்.
ஆனால், தாம் மலம் கழிக்கவில்லை என்று மகள் அவரிடம் கூறினார்.
விமானம் தரையிறங்கும்வரை அந்த துர்நாற்றத்துக்கான காரணத்தை அப்பயனாளர் கண்டறியவில்லை.
தமக்கு எட்டு வரிசைகளுக்கு முன்னால் அமர்ந்திருந்த பயணி ஒருவரே இருக்கையில் மலம் கழித்ததாக அப்பயனாளர் பின்னர் கூறினார். இதனால் இருக்கையின் பின்புறமும் கீழ்ப்பகுதியிலும் மலம் காணப்பட்டது.
விமானம் தரையிறங்கிய பின்னர் அந்தப் பயணி அட்லாண்டா விமான நிலையத்திற்குச் சென்றதாக அப்பயனாளர் கூறினார்.
விமானம் ஏறக்குறைய முக்கால் மணி நேரம் ஓடுபாதையில் இருந்ததாகச் சொன்ன அப்பயனாளர், அந்நேரம் முழுவதும் அப்பயணி மலத்தின்மீது அமர்ந்திருந்ததாகச் சொன்னார்.