பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்
பட்ஜெட்
திமுக வாக்குறுதி 181ஐ
முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல்:
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
அதிமுக காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றது.
இதில் மூன்று பட்ஜெட் தாக்கல் ஆனது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.
பணிநிரந்தரம் செய்ய மேலும் 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி காலமுறை சம்பளம் முதல்வர் வழங்குவார் என எதிர்பார்த்தோம்.
ஆனால் இப்போது 32 மாதங்கள் முடிந்து வெறும் 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தி இந்த ஜனவரி -2024 மாதம் முதல் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
10 லட்சம் மருத்துவ காப்பீடு ஆணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இது பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
12 ஆயிரம் குடும்பம் வாழ முதல்வர் தான் விடியல் தர வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேவையான நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell :9487257203