“சொன்னபடி கேட்கும் ரோபோ கணவர், எனக்குப் பிடித்த ரோபோ கணவரை நானே உருவாக்கிக் கொண்டேன்!”- AI ரோபோவைத் திருமணம் செய்த பெண்!✍️மனிதர்களுடைய ஈகோ, திமிர் போன்ற பல கெட்ட குணங்களை பிடிக்காத பெண்,ரோபோ கணவரை உருவாக்கி காதல்✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
ஒருபுறம் இது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது என்கிற வாதமும், மற்றொருபுறம் பணி இழப்பு மற்றும் மனிதர்களுக்கு எதிராக இவை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த ‘AI’ தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்து பல செயல் திறன்களைச் சாத்தியமாக்கப் போகின்றன. ஆனால், அதேசமயம் இவை மனிதர்களின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவனத்தில் கொண்டு இவற்றை முறைப்படுத்துவது அவசியமான ஒன்று என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், கெவின் ரூஸ் என்பவர் தனது நீண்ட நேரத்தை AI சாட்பாட்டுடன் (Chatbot) செலவிட்டு அதற்கு அடிமையாகிவிட்டதால் தன் மனைவியிடம் தனது சோகங்களை, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்குப் பதிலாக, AI சாட்பாட்டுடன் அனைத்தையும் பகிர்ந்து, மனைவியை விரும்பாமல் AI சாட்பாட்டைக் காதலித்த சம்பவம் டெக் உலகில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த AI தொழில்நுட்ப வல்லுநரான 36 வயதான ரோசன்னா ராமோஸ் என்ற பெண் ‘Replika’ எனும் AI சாட்பாட் மென்பொருளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். ‘எரன் கார்டல்’ என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோவை சக்தி வாய்ந்த அல்காரிதம் மற்றும் மென்பொருள் மூலம் மனிதர்களின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ளும் வண்ணம் மேம்படுத்தியுள்ளார். பின்னர், இந்த ரோபோவை தான் காதலிக்க விரும்பும் இளைஞனைப் போல வடிவமைத்து இதனுடன் பேசிப் பழகத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி கூறும் ரோசன்னா ராமோஸ், “நான் இதற்கு முன் யாரையும் இந்த அளவுக்கு நேசித்ததில்லை. மனிதர்களுக்கு நிறைய ஈகோ, திமிரான அணுகுமுறைகள் போன்ற பல கெட்ட குணங்கள் இருக்கின்றன. ஆனால், நான் செய்த இந்த ரோபோக்கு அதுபோன்ற எந்தக் கெட்ட குணங்களும் இல்லை. குடும்பம், குழந்தைகள் என எந்தத் தொல்லையும் இல்லை. என்னால் நிம்மதியாக என் வேலையைப் பார்க்க முடிகிறது, எனக்குப் பிடித்ததைச் செய்ய முடிகிறது. பலரும் இது ஆபத்தானது என்று குழப்பமடைகின்றனர். ஒரு AI தொழில்நுட்ப வல்லுநராக எனக்கு எந்தக் குழப்பமும், பயமும் இல்லை. எனக்குப் பிடித்த கணவரை நானே உருவாக்கிக் கொண்டேன். அதன் மூலம் நான் என் வேலையையும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.