ஜியோ செய்த தவறு என்ன?….?
VOIP அதாவது Voice Over Internet Protocol என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்களுக்கு செல்போன் நிறுவனங்கள் தங்கள் அனைத்து சேவைகளையும் வழங்கி வந்தன.
VOIP- Voice Over Internet Protocol என்றால் இன்டர்நெட் சேவைகள் மூலம் வாய்ஸ் கால்கள் தருவது.
ஜியோ வும் இதைத் தான் செய்தது.
ஒரே ஒரு வித்தியாசம்.
ஜியோ வாய்ஸ் கால்களை இலவசமாகத் தந்தது.
ஜியோவால் எப்படி இலவசமாகத் தர முடிந்தது?
இன்டர்நெட் மூலமாகத் தானே வாய்ஸ் கால்களும் செயல்படுகின்றன.மக்கள் ரீசார்ஜ் செய்யும் பணத்தில் இன்டர்நெட் டேட்டாவை மட்டும் தந்து விடுவோம். இன்டர்நெட் இருந்தால் வாய்ஸ் கால்கள் தானாகவே இலவசமாக வந்து விடும் அல்லவா.அதற்கு எதற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்க வேண்டும்!? என்று இன்டர்நெட் சேவைக்கு மட்டுமே கட்டணங்களை வகுத்தது.
ஜியோ வருகைக்கு முன்னர் இதர செல்போன் நிறுவனங்கள் முக்கியமாக ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் VOIP தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்தி வந்தன.ஆனால் அதன் பலனை மக்களுக்குத் தராததோடு, இன்டர்நெட் பயன்பாட்டுக்கு ஒரு கட்டணம், வாய்ஸ் கால்களுக்கு தனிக் கட்டணம் என ஏக கொள்ளை அடித்து வந்தன.
ஜியோ VOIP தொழில்நுட்பத்தைப் பகிரங்கப்படுத்தி அதன் பலனை நேரிடையாக மக்களுக்குத் தந்தது.அதனால் அவுட்கோயிங் கால்கள் இலவசமாக வந்தன.அதோடு ஒரு நாளுக்கு குறைந்தது 1.5 GB டேட்டாவும் இலவசமாக வந்தது.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு போன் செய்தால் அதற்கு ஒரு கட்டணம் கட்ட வேண்டும் என்பது டிராய் (TRAI) வகுத்துள்ள பழைய விதி.இந்த கட்டணத்தை இதுவரையில் ஜியோ தானே ஏற்று வந்தது.இப்போது மக்களிடம் கேட்கிறது.
அதுவும் எப்படி கேட்கிறது,உங்கள் ரீசார்ஜ் கட்டணத்தோடு 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.அந்தத் தொகையில் டிராய் வகுத்துள்ள இந்தக் கட்டணத்தை ஜியோ சரி செய்து கொள்ளும்.இந்த 10 ரூபாய்க்கு 1 ஜிபி அதிவேக 4G இன்டர்நெட் டேட்டாவை இலவசமாகத் தருகிறது.
மேலும் டிராய் போட்டுள்ள அந்த கட்டணத்தை அவர்கள் நீக்கிய அடுத்த நொடி நாங்களும் நீக்கி விடுவோம் என்கிறது.
இது நியாயமான கட்டணம் தான்.
ஜியோ வருகைக்கு முன்னர் இருந்த நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.ஒரு மாதத்திற்கு 1 ஜிபி 3 G டேட்டாவிற்கு ஏர்டெல் 700 ரூபாய் வசூலித்தது.இதோடு அவுட்கோயிங் கால்களுக்கு தனிக் கட்டணம்.இந்த கொள்ளையை ஜியோ தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
ஒரு மாதத்திற்கு 1 GB டேட்டா என்றிருந்த நிலைமையை ஒரு நாளைக்கு 1GB டேட்டா இலவசம் என்ற நிலையை ஜியோ கொண்டு வந்தது.
ஜியோ அவுட்கோயிங் கால்கள் இலவசம் என்று அறிவித்த பின்னரே மற்ற நிறுவனங்களும் வேறு வழியின்றி அதே திட்டத்தைச் செயல்படுத்தின.
1999 ல் ஏர்செல்,பிபிஎல் என்று இரண்டு நெட்வொர்க்கள் தான் இருந்தன. அப்போதெல்லாம் இன்கம்மிங் கால்களுக்கே ஒரு நிமிடத்திற்கு 35 பைசா கட்ட வேண்டும்.
இதை மாற்றியது ரிலையன்ஸ் தான்.2000 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் தன் போன் சேவையை 501 ரூபாயில் அறிமுகம் செய்தது.
“ஒரு தபால் கார்டு விலையை விட செல்போன் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும்…” என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றும் வகையில் ரிலையன்ஸ் போன் சேவைகளின் கட்டணம் இருந்தது.
அன்று துவங்கிய அந்த புரட்சி இன்றைக்கும் தொடர்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ எல்லா சேவையையும் தர வேண்டும்.
அதுவும் இலவசமாகத் தர வேண்டும்.
அதோடு அந்த கம்பனி நாசாமாகவும் போக வேண்டும். நினைப்பு நல்லதல்ல…..
ஜியோ செய்த தவறு….?
இலாப நோக்கத்தோடு செயல்படாமல், அனைத்தையும் இலவசமாக வழங்கியது தான் மிகப்பெரிய தவறு.