கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமூதாயத்திற்கு பாத்தியப்பட்டமாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா✍️11ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி,6-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சி , 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்று✍️ அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ தொடங்கி வைப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியபட்ட மகேஸ்வரர் சமேத மாலை யம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 11-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.16-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.பல்வேறு நிகழ்ச்சிகள்அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைபள்ளி கண்ணகி கலையரங்கத்தில் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலமும், மதியம் அக்கினி சட்டி எடுத்து நகர்வலம் வருதலும். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைபவமும் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு கட்சி கொடுத்த னர். பின்னர் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது. சாம கொடை யின் போது ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்க துணை தலைவர் பரம சிவன், தூத்துக்குடி வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழினிகுமார், சங்க துணை செயாலாளர் மணிமாறன், இணை செயலாளர் காளிதாஸ், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், நிர்வாக குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், கண்ணன், கார்த்திக், தங்கராஜ், சங்கர்கு மார், ஆறுமுகம், மாரிக்கண்ணன், கல்யாண சுந்தரம், மாரிக்கண்ணன், சுரேஷ், சின்னத்துரை, செண்பகராஜ், சின்னத்தம்பி, செங்கடேஷ் மேலும் அனைத்து மண்ட கபடிதாரர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.அன்னதான நிகழ்ச்சிஇன்று இரவு 7 மணிக்கு முன்னாள் நகர்மன்ற துணை தலைவரும் தொழிலதிபருமான ஏ.எஸ். ரத்தினவேல், கிருஷ்ணவேணி குடும்பத்தினர் சார்பில் திருக்கல்யாண நிகழச்சியும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தனுஷ் கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.