குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண தொகையை பெற வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண தொகையை பெற வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மிக கனமழை
கடந்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி பெய்த மிக கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
வெள்ள நிவாரணம்
அதன்படி அந்த தாலுகாக்களில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைதாரர்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 77 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரல்ரேகை பதிவு முறையில் (பயோமெட்ரிக்) நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த வெள்ள நிவாரண தொகையை வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே வெள்ள நிவாரண தொகையினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் 15-ந் தேதிக்குள் வெள்ள நிவாரண தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.