தமிழகம்

குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண தொகையை பெற வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

குடும்ப அட்டைதாரர்கள் வெள்ள நிவாரண தொகையை பெற வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

advertisement by google

மிக கனமழை

advertisement by google

கடந்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி பெய்த மிக கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து.

advertisement by google

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

advertisement by google

வெள்ள நிவாரணம்

advertisement by google

அதன்படி அந்த தாலுகாக்களில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைதாரர்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 77 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரல்ரேகை பதிவு முறையில் (பயோமெட்ரிக்) நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டது.

advertisement by google

மீதமுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த வெள்ள நிவாரண தொகையை வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே வெள்ள நிவாரண தொகையினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் 15-ந் தேதிக்குள் வெள்ள நிவாரண தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button