கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தவர் உயிரிழப்பு – நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தகவல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தவர் உயிரிழப்பு – நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தகவல்

advertisement by google

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.‌

advertisement by google

பென்னிக்ஸ் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

advertisement by google

பென்னிக்ஸ் உயிரிழப்பு குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button