எடப்பாடி பழனிசாமி உங்களை அசிங்கபடுத்தி விடுவேன் ட்ராபிக்ராமசாமி ஆவேச பேட்டி
பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் நீதிமன்றத்தில் உங்களை அசிங்கபடுத்திவிடுவேன் ட்ராபிக் ராமசாமி ஆவேச பேட்டியளித்தார்.
தமிழக சைவ மற்றும் அசைவ ஹோட்டல் உரிமையார்கள் முன்னேற்ற சங்கமும், சிகரமும் சாப்ட்வேர் டெக்னாலஜிஸம் இனைந்து (FOODEX) புட்டெக்ஸ் எனும் ஆப் நிறுவத்திடம் ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ட்ராபிக் ராமசாமி புதிய புட்டெக்ஸ் ஆப்யை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ராபிக் ராமசமி:-
தமிழ்நாட்டின் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கின்ற வேலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமர் 41-விளம்பர பலகைகள் வைக்க வேண்டுமென தகுதி இல்லாத IAS அதிகாரி மனு கொடுத்துள்ளார் அந்த மனு விசாரணையின் போது நான் நீதிமன்றத்தில் இல்லை ஆகவே இன்று இந்த வழக்கை சந்திக்க இருக்கிறேன் என ட்ராபிக் ராமசாமி சென்னையில் பேட்டி.
மேலும் சட்ட விரோதமாக பேனர் வைப்பதே தவறு, பிரதமர் மோடி பேனர் விளம்பரம் இல்லாமல் சென்னை வர மாட்டாரா ? என்ற கேள்வியை எழுப்பினார்.
மகாபலிபுத்தில் மோடி வருகையையொட்டி மாவட்ட ஆட்சியர் அப்பகுதி ஏழை மக்களை விரட்டி மோடிக்கு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மானங்கெட்ட இந்த அரசாங்கம் தானாக பதவி விலக வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்.
வரும் 25-ஆம் தேதி வரை பேனர் வைக்க தடை இருப்பதை அறிந்தும் அதை பொறுக்க முடியாத என ட்ராபிக் ராமசமி கேள்வி எழுப்பினார்.
மோடி யோக்கியமாக இருந்தால் மக்களை மதிப்பதாக இருந்தால் பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு மோடி வரக்கூடாது எனவும்
எடுபுடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் நீதிமன்றத்தில் உங்களை அசிங்கபடுத்திவிடுவேன் ட்ராபிக் ராமசமி ஆவேசம்.
34-உயிர்களை பலிவாங்கிய பிறகு பேனர் கலாச்சாரம் ஒரு முடிவுக்கு வரும்போது தமிழக அரசு இத்தகைய செயலை செய்வது மனசாட்சிக்கு விரோதம் எனவும் தெறிவித்தார்.