t

ஆக்ரோஷமாக, நான் என்ன பிரதமரானு கேட்ட பப்ஜி மதன்”✍️ நீ பெரிய அக்யூஸ்ட் வாயா என்று, போலீசார், பப்ஜி மதனிடம் ‘ கூறி அதிரடியாக அழைத்து வந்த போலீஸ்..!✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

”நான் என்ன பிஎம் -ஆன்னு கேட்ட பப்ஜி மதன்”… ”நீ அக்யூஸ்ட் வாயா” என்று கூறி அழைத்து வந்த போலீஸ்..!

advertisement by google

யூடியூபில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி வந்த புகாரில் சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி கிருத்திகா மற்றும் தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

advertisement by google

விசாரணையில் பப்ஜி மதனின் யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டு வந்தது தெரிய வரவே அவர் கைது செய்யப்பட்டார். மனைவியை விசாரணைக்கு அழைத்து வந்தால் தலைமறைவாகியுள்ள மதன் தாமாக சரண் அடைவார் என தந்திரத்தை போலீசார் நடத்தினர்.

advertisement by google

இந்நிலையில், தர்மபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை தனிப்படையினர் இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பப்ஜி மதனின் செல்போன், லேப்டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து வந்த நிலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

advertisement by google

சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு என தகவல்..!

advertisement by google

இந்நிலையில், பப்ஜி மதனை மதனை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது செய்தியாளர்கள் அவரை படம் பிடித்தனர். அப்போது ஒளிப்பதிவாளர்களை பார்த்து ‘நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க? என பப்ஜி மதன் கேட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த காவல் ஆய்வாளர் ”நீ அக்யூஸ்ட் வாயா” என்று காட்டமாக கூறி கூட்டிச் சென்றதாகவும் அங்கிருந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button