t
ஆகஸ்ட்15 ,76வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
advertisement by google
கோவில்பட்டி, ஆக. 10: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 76வது சுதந்திர தின விழா, வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பஸ், ரயில் நிலையங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை டிவிஷன் வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் கோவில்பட்டி ஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், ஏட்டு சங்கரலிங்கம் ஆகியோர் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பிறகே பயணத்திற்கு அனுமதித்தனர். மேலும் ரயில் நிலைய காப்பகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும் சோதனையிடப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google