வேலையை இழக்க காரணமாக இருந்தவர் வெட்டி படுகொலை? தூத்துக்குடியில் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடியில் வேலையை இழக்க காரணமாக இருந்தவர் வெட்டி படுகொலை
✍தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் நந்தகுமார் (வயது 42) அதே பகுதியை சேர்ந்த வேதமுத்துராஜ் என்பவரது மகன் ஜார்ஜ் (வயது45) இருவரும் அதே பகுதியில் பர்னிச்சர் உற்பத்தி செய்யும் பணி கூடத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இதில் ஜார்ஜ் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கி உள்ளது. இதற்கு காரணம் நந்தகுமார் தான் என்று ஜார்ஜுக்கு தெரியவந்துள்ளது எனவே நந்தகுமாரை கொலை செய்ய ஜார்ஜ் திட்டமிட்டுள்ளார். இதன்படி இன்று காலை 5/30 மணியளவில் நந்தகுமார் வேலைக்கு செல்ல வந்த ஜார்ஜை பின்னந்தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிசென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் சிப்காட் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி ஜார்ஜ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.