தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 32 புதிய இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 32 புதிய இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
✍பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், மனித கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உதவியாக தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள 32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கியுள்ளது. புதிய இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் பெண்கள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு வழங்கி வருவார்கள் என மாவட்ட கண்காணிப்பாளர் கூறினார்.