இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை✍️ எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்குபொதுத்தேர்வு நிச்சயம்✍️? கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லைஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்குபொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்கல்வி அமைச்சர் திட்டவட்டம்எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக நடத்தப் படும் என்றும், பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்ட வட்டமாக கூறினார்.

advertisement by google

சென்னை, டிச.29-

advertisement by google

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன.

advertisement by google

நடப்பு கல்வியாண்டுக் கான வகுப்புகள் ஆன்- லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

advertisement by google

பூஜ்ஜியம் கல்வி ஆண்டு

advertisement by google

இந்தநிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறுமா? மாணவர்களுக்கு இறுதித்தேர்வு எப்படி நடக்கும்? 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

advertisement by google

எந்தவித கல்வி நடவடிக்கைகளும் நடைபெறாத ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக கருதப்படும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா? என்றெல்லாம்கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சில தெளிவுகளை தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று மினி கிளினிக் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

advertisement by google

பொதுத்தேர்வுநிச்சயமாக நடக்கும்

அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்தவுடன் மீண்டும் மூடி இருக்கின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அருகில் உள்ள மாநிலங்களில் நிலவும் சூழலை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக நடக்கும். முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்.

நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது. அதற்கான வாய்ப்பு இல்லை.மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாலும் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளுவருக்கு காவி உடை

இதையடுத்து திருவள்ளுவர் காவி உடை அணிந்ததுபோல கல்வி தொலைக்காட்சியில் வெளியான காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுபற்றி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பேராசிரியர் ஒருவரின் தவறால் அப்படி இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது’ என்றார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button