விருதுநகரில் அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர்கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 500பேர் அஇஅதிமுகவில் இணைந்தனர்✍️ ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பிரபல அதிமுக பிரமுகரும் , விருதுநகர் பூத் கமிட்டி பொறுப்பாளருமான கொடைவள்ளல் கோகுலம்தங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரிலும் ,முன்னிலையிலும் மாற்றுக்கட்சியினர் 500 பேர் அஇஅதிமுக இணைந்தனர்.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான K.T.இராஜேந்திரபாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி 22.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் சட்டமன்ற தொகுதி பூத்கமிட்டி உறுப்பினர் கோகுலம் தங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 500 பேர்கள் அக்கட்சியிலிருந்து விடுவித்துக்கொண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் தலைமையிலும்,அஇஅதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் தடங்கம் நாகராஜ்,மற்றும் அ.மச்சராஜா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய இனைந்த அனைவருக்கும் அதிமுக கொடி வரைந்த சால்வையை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கூரைக்குண்டு ஊராட்சிமன்றத் தலைவர் செல்வி மாரிக்கனி,இராஜஇராஜன், ஜெயசீலன், மற்றும் கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கோகுலம் குழும பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கன்னிச்சேரிபுதூரில் கலந்து கொண்டு சிறப்பிதனர்✍️✍️✍️விண்மீன்நியூஸ்✍️✍️✍️