கோவில்பட்டி புதுக்கிராமம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி புதுக்கிராமம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழா
கோவில்பட்டி புதுக்கிராமம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழா சமுதாயப்பணிகளுடன் நடைபெற்றது.
கோவில்பட்டி புதுக்கிராமம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழா சமுதாயப்பணிகளுடன் நடைபெற்றது. அதிகாலையில் குருபூஜை, வினாயகர் பூஜை, சக்திபூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் சிறக்கவும், மக்கள் வளமுடன் வாழவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையை மாவட்ட வேள்விக்குழு தலைவர் கிருஷ்ணநீலா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சக்தி கொடியை முன்னாள் ரானுவ வீரர் பொன்னுசாமி முன்னிலையில் பொறியாளர் மாரிக்கண்ணன் ஏற்றி வைத்தார். இயற்கை சீற்றம் தணியவேண்டி கஞ்சி கலய ஊர்வலத்தை சக்தி பைனான்ஸ் சிங்கராஜ், இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் சங்கரன் முன்னிலையில், தினசரி மார்க்கெட் தலைவர் முத்துராஜ் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது. அன்னதான நிகழ்ச்சியை ரோஸ் கண்னன் முன்னிலையில், இணைச்செயலாளர் பிரச்சாரம் சொர்ணலெட்சுமி வழங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இலவச தையல் பயிற்சி பள்ளியை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் திலகவதி முன்னிலையில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தொடங்கி வைத்தார். விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் எஸ்.மாரிமுத்து, பொருளாளர் கண்ணன், துனைத்தலைவர் பண்டாரமுருகன், தணிக்கை இணைச்செயலாளர் குழு வி.வேலு, இளைஞர் அணி தலைவர் செல்லத்துரை, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, புதூர் மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற தலைவர் செந்தில்குமார் செய்திருந்தார்.