இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மதியவிரிவானசெய்திகள்(22. 9.2019)Flash: மோகன்லால் வீட்டில் யானைதந்தம் பரபரப்பு

advertisement by google

???விண்மீண்நியூஸ்????வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு – நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை

advertisement by google

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ???அயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு

advertisement by google

உத்தர பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை அயோத்தி நிலம் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ???உ.பி.யில் துணிகரம் – சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை

advertisement by google

உத்தர பிரதேசத்தில் சொத்துத் தகராறு காரணமாக பூசாரி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

advertisement by google

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ???ஹூஸ்டனில் எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

advertisement by google

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்குள்ள எரிசக்தி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசினார்.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்்

advertisement by google

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement by google

கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.இந்த 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதனடிப்படையில் 2023-ம் ஆண்டு வரை இந்த 17 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் சபாநாயகரின் தகுதி நீக்க முடிவை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள விசாரணையில் இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ???கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் கொல்லப்படலாம் – காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்

சாரதா நிதி நிறுவன மோசடியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் தேடப்படும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் கொல்லப்படலாம் என மேற்கு வங்காளம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சக்திவேல் உத்தரவின்படி
பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் குளத்தை தூர்வாரும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈடுபட்டனர். காவல்துறையினருடன் இணைந்து சுற்றுவட்டார பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை தூர்வாருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் காவல்துறை மக்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த காவல்துறையின் இச்செயலை சுற்றுவட்டார பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ?‍♀?‍♀?‍♀உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள்…

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவின் ஏகாடரின்பர்க் நகரில், 9 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியின் 52 கிலோ இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அமித் பங்கல் தேர்வு பெற்றார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் சாக்கோபிடின் சைரோவை (Shakhobidin Zoirov) அவர் எதிர்கொண்டு 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

இப்போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் சைரோவை எதிர்த்து கடைசி வரை அமித் கடுமையாகப் போராடினார்.

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெறும் முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையை அமித் பங்கல் பெற்றுள்ளார்.

63 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரரான மணீஷ் கவுசிக் அரையிறுதி வாய்ப்பை இழந்தபோதும், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

SRI??செய்திகுழுமம்
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ♦மெட்ரிக் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகார ஆணை-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

?மதுரை விரகனூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த, மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது.

?இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

?தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியுடன் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும்.

?மெட்ரிக்குலேசன்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் தொடர் அங்கீகார ஆணை, விரைவில் 2 வருடங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட உள்ளது.

?மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து, அங்கீகார ஆணைக்கு  விண்ணப்பித்தவுடனே துரிதமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

?மேலும் மெட்ரிக் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்யவும், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

?70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்காகவே இந்த அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது.

?தனியார் பள்ளிகள்  மீது அரசு பாரபட்சம் காட்டாது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

♦Friends Social Media
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: ✈✈✈3 நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து சென்றார்

தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து பின்லாந்து நாட்டுத் தலைவர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக பின்லாந்து சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தலைநகர் ஹெல்சிங்கியில் அந்நாட்டு பிரதமர் ஆண்ட்டி ரினி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அவர் பேசுபோது, இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாகக் கூறினார்.

தீவிரவாதத்தினால் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்திதுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், ஒட்டுமொத்த உலக நாடுகளின் நன்மைக்கவே இந்தியா குரல் கொடுப்பதாகக் கூறினார்.


[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள் தற்போது பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டதில் பரவலாக மழை
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

உலக மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து இந்திய வீரர் தீபக் பூனியா விலகல்; காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து விலகுவதையடுத்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவான்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை – கமல் அறிவிப்பு
[9/22, 3:40 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சிறு குறு தொழில்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திடு. சி.ஐ.டி.யு 14வது மாநாடு கோரிக்கை.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀

சிதம்பரம் பொன்னாங்கன்னிமேட்டில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் நைனாராம் (30) என்பவர் கைது


[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.56 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து விற்பனை
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் பேரணி

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு

2021-ம் ஆண்டுக்குள் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு முதல் இந்தியரை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???டெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்? – புலம்பும் டிரைவர்கள்

முதலுதவி பெட்டிகளில்ல் ஆணுறை இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக டெல்லியில் உள்ள டாக்சி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???அயோத்தி நிலம் வழக்கு: உ.பி முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவு

உத்தர பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை அயோத்தி நிலம் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆந்திர முன்னாள் எம்.பி. மரணம்

ஆந்திர முன்னாள் எம்.பி.யும், நடிகருமான நரமல்லி சிவபிரசாத் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளையமகன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ஒருவர் டி.வி. பேட்டியில் பரபரப்பு புகார் கூறினார்.
[9/22, 3:41 PM] விண்மீண்நியூஸ்2: ???2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் – காங்கிரஸ் அறிவிப்பு

மராட்டியம், அரியானா ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button