விருதுநகரில் கல்போது கிராமத்தில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள் சொந்தமாக கட்டிகொடுத்த, தூயஉபகார அன்னை ஆலயத்தை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகர் சட்டமன்றத்தில் கல்போது கிராமத்தில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள் சொந்தமாந்தமாக கட்டிமுடித்த, தூயஉபகார அன்னை ஆலயத்தை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் தங்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாண்புமிகு அமைச்சர் உரையில் கோகுலம்.M. தங்கராஜ் அவர்கள் விருதுநகருக்கு செய்த நலத்திட்டங்களான ,மேம்பாலம் அமைத்தல்,பள்ளிகட்டிகொடுத்தல், அனைத்து விருதுநகர் சட்டமன்ற மக்களுக்கும் அரிசிமளிகை பொருட்கள் வழங்கும் நலத்திட்டங்கள் மேலும் அனைத்து மத வழிபாடுதளங்கள் , என அரசு செய்கின்ற உதவிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்த கோகுலம்.M. தங்கராஜ் அவர்களை பெருமைபடுத்தி பேசினார். மேலும் பொதுமக்களுக்கு எதாவது குறையிருப்பின் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களை அனுகவும் என பெருமைபடுத்தி பேசினார் .திறப்புவிழா நிகழ்ச்சியில் மதுரைமறைமாவட்டபேராயர் அந்தோணிபாப்புசாமி,பங்குதந்தை பெனடிக்ட் பெர்ணபாஸ், உதவிபங்குதந்தை பென்சிகர்,மற்றும் ஏராளமான அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் ,கோகுலம் குழுமத்தலைவரின் மனைவி மாலாதங்கராஜ் அவர்கள்,சிவகாசி வடக்கு ஒன்றியச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கோகுலம் இளையதளபதி வில்சன்,சிவகாசி வடக்கு ஒன்றிய இனைச்செயலாளர் பாலமுருகன், விருதுநகர் மாவட்டகழக அவைத்தலைவரும் வழக்கறிஞருமான விஜயக்குமார்,விருதுநகர்யூனியன் சேர்மன் சுமதிராஜசேகர் ,மாவட்ட கவுன்சிலர்கள் கே.ஏ.மச்சராஜா, தடங்கம் நாகராஜ்,விவசாய அணித்தலைவர் உதயகுமார் , இளைஞர் அணி செயலாளர் மகேஷ்வரன் , சின்னத்திரை பால்பாண்டி மற்றும் பங்கிலுள்ள அனைத்து மக்களும், ஊர்பொதுமக்கள்,விழாகுழுவினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.