கோவில்பட்டி KR குழுமம் (NEC, KR College இலக்குமி பாலிடெக்னிக்)கொரானாவை கட்டுபடுத்த பத்து லட்சம் நிதியுதவி?
கோவில்பட்டி, கே.ஆர்.எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் பத்து லட்சம் நிதியுதவி
கரோனா வைரஸை எதிர்த்து போராடும் நடவடிக்கைக்கு கே.ஆர்.எக்ஸ்போர்ட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் பத்து லட்சம் நிதியுதவியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் இன்று காலை வழங்கியது.
கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கவசங்கள், சுவாசக் கருவிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கே.ஆர்.எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிலெட், நேஷனல் பொறியியல் கல்லூரி, இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் உயர்திரு. கே.ஆர்.அருணாச்சலம் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ரூபாய் பத்து லட்சத்திற்கான வரைவோலையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.